Don't Miss!
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மேனேஜருடன் சேர்ந்து ரூ 20 லட்சம் கடத்தினாரா நயன்தாரா?
இந்தப் பயணம் சாதாரணமாக நடந்ததல்ல... பல லட்சம் ரூபாய் பணம் கடத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வரும் செய்திகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லி வருகிறார் நயன்தாரா.
நடிகை நயன்தாரா பாங்காங் சுற்றுப்பயணம் சென்று விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவருடன் மானேஜர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோரும் வந்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நயன்தாராவை மடக்கி விசாரணை நடத்தியதாகவும், அவரது மேனேஜர் ராஜேஷ், மேக்கப்மேன் ராஜு ஆகியோரிடமும் தனித் தனியாக விசாரணை நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. காரணம் நயன் மேனேஜர் எனப்படும் ராஜேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராம். இவரை நயன்தாராவுக்கு பிரபுதேவாதான் மேனேஜராக்கினாராம்.
நயன்தாராவும் ராஜேஷும் பாங்காங் சென்ற போது ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாகவும், எனவேதான் அவர்கள் சென்னை திரும்பிய போது சுங்க அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் கூறப்பட்டது. அந்த ரூ 20 லட்சம் எடுத்துச் சென்றது எதற்காக என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்களாம் அதிகாரிகள்.
இந்த வதந்திக்கும் நயன்தாரா பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் பாங்காக் போய் வந்தது குறித்து வரும் மூன்றாவது வதந்தி இது.
பாங்காங் சென்ற போது ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. அவ்வளவு பெரிய தொகையை விமானத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள். விமான நிலையத்தில் எனக்கு நடந்தது சாதாரணமான பாதுகாப்பு சோதனைதான் என்றால் ஏன் யாரும் நம்ப மறுக்கிறீர்கள். இது உங்களுக்கும் கூட நடக்கலாம்," என்றார்.