Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
கோயில்களில் நயன்தாராவுக்கு அனுமதி!
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா, பிரபு தேவாவைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்துக்கு சமீபத்தில் மாறினார். சென்னை ஆர்ய சமாஜத்தில் அவரை மதம் மாற்றும் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் நடந்தது.
இதற்கு முன் நயன்தாரா பல இந்துக் கோயில்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் குருவாயூர், காளஹஸ்தி, பத்ராசலம் போன்ற கோயில்களுக்கு மட்டும் அவர் செல்லவில்லை. காரணம் பிற மதத்தினருக்கு இந்த கோயில்களில் அனுமதியில்லை.
இப்போது இந்துவாக மாறிவிட்ட நயன்தாரா, திருமணத்துக்கு முன் கோயில்களுக்குச் சென்று வருகிறார். நேற்று பத்ராச்சலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோயிலில் நடந்த ஸ்ரீராமராஜ்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நயன்தாரா. இந்த விழாவில் இளையராஜா, பாலகிருஷ்ணா போன்றவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாராவுக்கு சிறப்பு மரியாதையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
அடுத்து குருவாயூர் கோயிலுக்குச் செல்கிறார் நயன்தாரா. கடந்த இரு வாரங்களுக்கு முன் நயன்தாராவின் காதலர் பிரபுதேவா இந்தக் கோயிலுக்கு தனியாக சென்று வழிபட்டார். இந்த முறை நயன்தாராவும் பிரபுதேவாவும் சென்று சிறப்பு பூஜைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.