மலையாளத்தில் நயனதாரா
ஐயாவில் அறிமுகமான நயனதாராவைப் பார்த்து இந்தப் பூனையும் பீர் குடிக்குமா..ஸாரி பால் குடிக்குமா என்று கேட்காத குறையாக படு பாந்தமாக அப்படத்தில் வந்துபோனார்.
அடுத்த படமே ரஜினியுடன் என்றதால், நயனதாராவுக்கு மார்க்கெட் படு வேகமாகசூடு பிடித்தது.
இப்போது நயனதாராவின் கையில் தமிழில் அதிக படங்கள் இல்லை. மாறாக அவரதுஇதயம் பூராவும் சிம்புதான். தமிழில் ஒரு ரவுண்டு முடித்து விட்ட நயனதாராஇப்போது தெலுங்கிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்.
லட்சுமி என்ற அவரது முதல் தெலுங்குப் படம் சுமாராக போனாலும் கூட,நயனதாராவுக்கு அங்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்போது மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் நயனதாரா.மலையாளத்திலிருந்து வந்திருந்தாலும் கூட அங்கு நயனதாரா நடித்த படங்கள்ரொம்பக் குறைச்சல். இயக்குனர் ஜோஷியின் புதிய படத்தில் நயனதாராநடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பது மம்தா மோகன்தாஸ் புகழ் சுரேஷ்கோபி.
ஜோஷியும், சுரேஷ்கோபியும் சேர்ந்து செய்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால்இந்தப் படமும் பெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயனதாராவை கிளாமரான ரோலில் காட்டப் போகிறாராம் ஜோஷி. இதை முன்பேஅவரிடம் சொல்லித்தான் புக் செய்துள்ளாராம் ஜோஷி. இத்தனை நாயகிகளைப்போட்டு படம் எடுப்பதால் படத்தில் கிளாமருக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications