தாமத தாரா நயனதாரா செய்த தாமத கலாட்டாவால் வெறுத்துப் போன ஈ பட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி புதிய ஏற்பாடு ஒன்றை செய்து, தாராவை வழிக்குக் கொண்டு வந்துள்ளார். ஏகப்பட்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு அதைச் சரியாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி நடித்து வருகிறார் நயனதாரா. அத்தோடு வல்லவன், கள்வனின் காதலி என முக்கியமான சில படங்களுக்கு டிஸ்கஷன் வேறு அதிகமாக இருப்பதால் தினசரி ரொம்பத் தாமதமாகவே தூங்கப் போகிறாராம். இப்படி தாமதமாக தூங்கி, தாமதமாக எழுந்து அடுத்த நாள் காலை தாமதாகவே ஷூட்டிங் போவதால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்களாம். அதில் ரொம்பவே பாதிக்கப்பட்டவர் ஆர்.பி.செளத்ரிதான். அவரது தயாரிப்பில் மகன் ஜீவாவை வைத்து உருவாகும் ஈ படத்தில் நயனதாரா ஹீரோயினாக நடிக்கிறார். தொடர்ந்து நயனதாரா தாமதமாக வருவதைப் பார்த்த செளத்ரி முதலில் கூப்பிட்டு டோஸ் கொடுக்க உடனே அடுத்த நாளில் இருந்து சரியாக வந்து போனார். ஆனால், இது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. மீண்டும பழைய குருடி கதவ திறடி என்று லேட்டாக வர ஆரம்பித்துள்ளார் நயன்ஸ். இதை எப்படி சரி செய்யலாம் என்று யோசித்துள்ளார். சடாரென ஒரு ஐடியா வந்தது. நயனதாராவுக்காக ஒரு ஸ்பெஷல் மானேஜரை போட்டார். நயனதாராவை தினமும் சரியான டைமுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவது மட்டுமே அவரது வேலை. தினசமும் காலை முதல் நயனதாரா தூங்கப் போவது வரை அவருக்கு தேவையா அத்தனையையும் பார்த்துப் பார்த்து செய்து அவரை வேறு எங்கும் போக விடாமல், பத்திரமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தூக்கி வந்து விடுவதுதான் அவரது பொறுப்பு. இதன் காரணமாக முதல் நாள் ஷூட்டிங் முடிந்தவுடன் அவரை வேறு எங்கும் போக விடாமல், அவருக்குத் தேவையான அத்தனை ஐட்டங்களையும் ஹோட்டல் ரூமுக்கே கொண்டு வந்து கொட்டி விடுகிறாராம் மானேஜர். இதனால் அங்கே போகனும், இங்கே போகனும் என்று சாக்குப் போக்கச் சொல்ல முடியாமல், சீக்கிரமே தூங்கப் போய், அடுத்த நாள் காலை ஷார்ப்பாக ஸ்பாட்டில் வந்து நிற்கிறாராம் தாரா. கொஞ்சம் செலவான விஷயமாக இருந்தாலும் கூட படத்தை வேகமாக முடிக்க இதுதான் சரியான வழி என்று தொடர்ந்து இந்த ஏற்பாட்டை கண்டினியூ செய்கிறாராம் செளத்ரி. இந்த ஹீரோயின்களை வழிக்குக் கொண்டு வர தயாரிப்பாளர்கள் என்னல்லாம் பட வேண்டியிருக்கிறது. இதற்கிடையே கள்வனின் காதலி படப்பிடிப்பின்போது பாங்காக்கில் நயனதாரா தனியே போய் அந்த நாட்டு இமிக்ரேசன் அதிகாரிகளிடம் மாட்டி சிக்கிய கதை உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாத ஒரு மேட்டர் இதோ. அதிகாரிகளின் டார்ச்சருக்கு உள்ளாகி ஒரு வழியாக சூட்டிங்கில் பங்கேற்ற நயனதாராவிடம் மிக மிக கிளுகிளுப்பான ஒரு டிரஸ்ஸைக் கொடுத்து ஆடச் சொன்னார்களாம். கவர்ச்சி விஷயத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காட்ட நயன்ஸ் ரெடியானவர் தான் என்றாலும் தனக்கு பாங்காக்கில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து விலகாமல் இருந்ததால் அந்த டிரஸ்ஸை போட மாட்டேன் என்றாராம். இதையடுத்து படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா தலையிட்டு நயனதாராவை ஏதோ சொல்ல பதிலுக்கு நயன்சும் திட்ட, இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் ஆபாசமாக திட்டிக் கொண்டார்களாம். அப்புறம் யூனிட்டார் தலையிட்டு சமாதானப்படுத்தி டான்ஸை எடுத்துமுடித்துவிட்டுத் திரும்பி வந்தார்களாம். கொசுறு: ஒரே ஒரு பாட்டுக்கு ஆட இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு நயனதாரா வாங்கும் சம்பளம் ரூ. 5 லட்சமாம்.

By Staff
நயனதாரா செய்த தாமத கலாட்டாவால் வெறுத்துப் போன ஈ பட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி புதிய ஏற்பாடு ஒன்றை செய்து, தாராவை வழிக்குக் கொண்டு வந்துள்ளார்.

ஏகப்பட்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு அதைச் சரியாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி நடித்து வருகிறார் நயனதாரா. அத்தோடு வல்லவன், கள்வனின் காதலி என முக்கியமான சில படங்களுக்கு டிஸ்கஷன் வேறு அதிகமாக இருப்பதால் தினசரி ரொம்பத் தாமதமாகவே தூங்கப் போகிறாராம்.

இப்படி தாமதமாக தூங்கி, தாமதமாக எழுந்து அடுத்த நாள் காலை தாமதாகவே ஷூட்டிங் போவதால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்களாம். அதில் ரொம்பவே பாதிக்கப்பட்டவர் ஆர்.பி.செளத்ரிதான். அவரது தயாரிப்பில் மகன் ஜீவாவை வைத்து உருவாகும் ஈ படத்தில் நயனதாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

தொடர்ந்து நயனதாரா தாமதமாக வருவதைப் பார்த்த செளத்ரி முதலில் கூப்பிட்டு டோஸ் கொடுக்க உடனே அடுத்த நாளில் இருந்து சரியாக வந்து போனார். ஆனால், இது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. மீண்டும பழைய குருடி கதவ திறடி என்று லேட்டாக வர ஆரம்பித்துள்ளார் நயன்ஸ்.

இதை எப்படி சரி செய்யலாம் என்று யோசித்துள்ளார். சடாரென ஒரு ஐடியா வந்தது. நயனதாராவுக்காக ஒரு ஸ்பெஷல் மானேஜரை போட்டார். நயனதாராவை தினமும் சரியான டைமுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவது மட்டுமே அவரது வேலை.

தினசமும் காலை முதல் நயனதாரா தூங்கப் போவது வரை அவருக்கு தேவையா அத்தனையையும் பார்த்துப் பார்த்து செய்து அவரை வேறு எங்கும் போக விடாமல், பத்திரமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தூக்கி வந்து விடுவதுதான் அவரது பொறுப்பு.

இதன் காரணமாக முதல் நாள் ஷூட்டிங் முடிந்தவுடன் அவரை வேறு எங்கும் போக விடாமல், அவருக்குத் தேவையான அத்தனை ஐட்டங்களையும் ஹோட்டல் ரூமுக்கே கொண்டு வந்து கொட்டி விடுகிறாராம் மானேஜர்.

இதனால் அங்கே போகனும், இங்கே போகனும் என்று சாக்குப் போக்கச் சொல்ல முடியாமல், சீக்கிரமே தூங்கப் போய், அடுத்த நாள் காலை ஷார்ப்பாக ஸ்பாட்டில் வந்து நிற்கிறாராம் தாரா.

கொஞ்சம் செலவான விஷயமாக இருந்தாலும் கூட படத்தை வேகமாக முடிக்க இதுதான் சரியான வழி என்று தொடர்ந்து இந்த ஏற்பாட்டை கண்டினியூ செய்கிறாராம் செளத்ரி.

இந்த ஹீரோயின்களை வழிக்குக் கொண்டு வர தயாரிப்பாளர்கள் என்னல்லாம் பட வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே கள்வனின் காதலி படப்பிடிப்பின்போது பாங்காக்கில் நயனதாரா தனியே போய் அந்த நாட்டு இமிக்ரேசன் அதிகாரிகளிடம் மாட்டி சிக்கிய கதை உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாத ஒரு மேட்டர் இதோ.

அதிகாரிகளின் டார்ச்சருக்கு உள்ளாகி ஒரு வழியாக சூட்டிங்கில் பங்கேற்ற நயனதாராவிடம் மிக மிக கிளுகிளுப்பான ஒரு டிரஸ்ஸைக் கொடுத்து ஆடச் சொன்னார்களாம். கவர்ச்சி விஷயத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காட்ட நயன்ஸ் ரெடியானவர் தான் என்றாலும் தனக்கு பாங்காக்கில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து விலகாமல் இருந்ததால் அந்த டிரஸ்ஸை போட மாட்டேன் என்றாராம்.

இதையடுத்து படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா தலையிட்டு நயனதாராவை ஏதோ சொல்ல பதிலுக்கு நயன்சும் திட்ட, இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் ஆபாசமாக திட்டிக் கொண்டார்களாம். அப்புறம் யூனிட்டார் தலையிட்டு சமாதானப்படுத்தி டான்ஸை எடுத்துமுடித்துவிட்டுத் திரும்பி வந்தார்களாம்.

கொசுறு: ஒரே ஒரு பாட்டுக்கு ஆட இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு நயனதாரா வாங்கும் சம்பளம் ரூ. 5 லட்சமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X