நயன்தாராவின் இளநீர்! நயன்தாராவுக்கு ரொம்பப் பிடிச்ச பானம் எது தெரியுமோ? நிச்சயாக அது இல்லை, இளநீராம். நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அந்த இடத்த்தில் 20க்கும் மேற்பட்ட செவ்விளநீர்க் காய்கள் ஸ்டாக் இருக்குமாம்.ஒவ்வொரு டேக் முடிந்த பிறகும் ஒரு இளநீரை உள்ளே தள்ளுகிறாராம் நயன். ஏன் இப்படி இளநீர் மோகம் என்று நயனிடம் கேட்டபோது, இளநீர் உடலுக்கு நல்லது சேட்டா. அதை சாப்பிட்டால் ரத்த ஓட்டம்சீராக இருக்கும். தொப்பை போடாது. பக்க விளைவு ஏதும் ஏற்படாது. உடலுக்கு குளிர்ச்சியும் கூட, சூடு உடம்புக்காரர்களுக்குஇது அருமையான மருந்து (ஓஹோ!). நம்ம முகத்தையும், உடலையும் பொலிவாக வைத்திருக்க நாளும் நாம் அருந்த வேண்டிய பானம் இளநீர் என்று விளம்பரப்படத்தில் வருவது கணக்காக மினி கிளாஸே எடுக்கிறார் நயன். இதனால் நயன் கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் அவர் வருவதற்கு முன்பாகவே முதலாவதாக இளநீர் காய்கள் வந்துவிடுகிறதாம். தமிழிலில் கை நிறையப் படங்களை வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா இந்தி மற்றும் தெலுங்கிலும் தலை காட்டப்போகிறார். இந்திப் படத் தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் நயனை வந்து சந்தித்தாராம். அவரிடம் ரொம்ப யோசித்துக் கொண்டே, வந்தால் மலை போனால் மயிர் என்பது போல ஒரு தொகையை சம்பளமாககேட்டுள்ளார். அந்தத் தயாரிப்பாளரோ சிரித்துக் கொண்டே செக்கில் கையெழுத்துப் போட்டு நயனிடம் நீட்டியுள்ளார். வாங்கிப் பார்த்தநயனுக்கு தலை சுற்றாத குறை தானாம். அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கி விட்டாராம். இதற்குக் காரணம், நயன் கேட்ட தொகையைப் போல இரண்டு மடங்கு தொகையை அதில் தயாரிப்பாளர் எழுதியிருந்தது தான்.அடுத்த நிமிடமே அந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து விட்டாராம் அம்மணி. இந்திப் படக்காரர்கள் ஒரு படத்தை குறைந்தது 2 வருடத்திற்கு குறையாமல் எடுப்பார்கள் என்பது அம்மணிக்குத் தெரியுமோஎன்னவோ? அதேபோல தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார். இதில் அவருக்கு கிராமத்துப் பெண் கேரக்டராம்.ஆனால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காதாம். தெலுங்குப் பட ரசிகர்களின் முதல் விருப்பமே கவர்ச்சி தான் என்பதால் கிளாமராக நடிக்க ஆட்சேபனை இல்லை என்று கூறிவிட்டாராம் நயன். புள்ள பொழச்சுக்கும்!

By Staff

நயன்தாராவுக்கு ரொம்பப் பிடிச்ச பானம் எது தெரியுமோ? நிச்சயாக அது இல்லை, இளநீராம்.

நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அந்த இடத்த்தில் 20க்கும் மேற்பட்ட செவ்விளநீர்க் காய்கள் ஸ்டாக் இருக்குமாம்.ஒவ்வொரு டேக் முடிந்த பிறகும் ஒரு இளநீரை உள்ளே தள்ளுகிறாராம் நயன்.

ஏன் இப்படி இளநீர் மோகம் என்று நயனிடம் கேட்டபோது, இளநீர் உடலுக்கு நல்லது சேட்டா. அதை சாப்பிட்டால் ரத்த ஓட்டம்சீராக இருக்கும். தொப்பை போடாது. பக்க விளைவு ஏதும் ஏற்படாது. உடலுக்கு குளிர்ச்சியும் கூட, சூடு உடம்புக்காரர்களுக்குஇது அருமையான மருந்து (ஓஹோ!).

நம்ம முகத்தையும், உடலையும் பொலிவாக வைத்திருக்க நாளும் நாம் அருந்த வேண்டிய பானம் இளநீர் என்று விளம்பரப்படத்தில் வருவது கணக்காக மினி கிளாஸே எடுக்கிறார் நயன்.

இதனால் நயன் கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் அவர் வருவதற்கு முன்பாகவே முதலாவதாக இளநீர் காய்கள் வந்துவிடுகிறதாம்.


தமிழிலில் கை நிறையப் படங்களை வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா இந்தி மற்றும் தெலுங்கிலும் தலை காட்டப்போகிறார். இந்திப் படத் தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் நயனை வந்து சந்தித்தாராம்.

அவரிடம் ரொம்ப யோசித்துக் கொண்டே, வந்தால் மலை போனால் மயிர் என்பது போல ஒரு தொகையை சம்பளமாககேட்டுள்ளார்.

அந்தத் தயாரிப்பாளரோ சிரித்துக் கொண்டே செக்கில் கையெழுத்துப் போட்டு நயனிடம் நீட்டியுள்ளார். வாங்கிப் பார்த்தநயனுக்கு தலை சுற்றாத குறை தானாம். அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கி விட்டாராம்.

இதற்குக் காரணம், நயன் கேட்ட தொகையைப் போல இரண்டு மடங்கு தொகையை அதில் தயாரிப்பாளர் எழுதியிருந்தது தான்.அடுத்த நிமிடமே அந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து விட்டாராம் அம்மணி.

இந்திப் படக்காரர்கள் ஒரு படத்தை குறைந்தது 2 வருடத்திற்கு குறையாமல் எடுப்பார்கள் என்பது அம்மணிக்குத் தெரியுமோஎன்னவோ?

அதேபோல தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார். இதில் அவருக்கு கிராமத்துப் பெண் கேரக்டராம்.ஆனால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காதாம்.

தெலுங்குப் பட ரசிகர்களின் முதல் விருப்பமே கவர்ச்சி தான் என்பதால் கிளாமராக நடிக்க ஆட்சேபனை இல்லை என்று கூறிவிட்டாராம் நயன்.

புள்ள பொழச்சுக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X