twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புயல் வேக நயன்தாரா கேரள நாட்டு கட்டழகிகளிலேயே இப்போதைக்கு ரொம்ப பிசியாக இருப்பவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர்அஸின், இன்னொருவர் நயன்தாரா. இருவருமே கேரளாவின் மலபார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்இங்கே விசேஷம்.எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலம் அறிமுகமாக படு வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் அஸின், தமிழ்சினிமாவின் முன்னணி நாயகர்களான விக்ரம், அஜீத், சூர்யா ஆகியோருடன் ஒரே நேரத்தில் நடித்துக் கலக்கிக்கொண்டிருக்கிறார்.அவருக்குக் கடும் போட்டியாக திகழ்பவர் நயன்தாரா. ஐயா மூலம் வந்த அவர் சந்திரமுகி மூலம் உச்சத்திற்குப்போய் விட்டார். கை நிறையப் படங்களுடன் கலக்கி வரும் நயன்தாரா எப்படிப்பட்ட ரோல் என்றாலும் உடனேமண்டையை ஆட்டி விடுகிறாராம்.அஸினுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நிடக்கும் கடும் போட்டியை கோலிவுட்காரர்கள் கூட்டமாக கூடிகும்மாளமிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.சிம்புவுடன் வல்லவன், எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி, சூர்யாவுடன் கஜினி, விஜய்யுடன் சிவகாசிபடத்தில் ஒரு குத்துப் பாட்டு என படு ஸ்பீடாக போய்க் கொண்டிருக்கிறார் நயன்தாரா.இப்போது இன்னொரு முன்னணி நாயகனுடன் சேரும் வாய்ப்பும் நயன்தாராவைத் தேடி வந்துள்ளது. அது,அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு. ஏவி.எம். நிறுவனம் தயாரிக்க அஜீத் நடிக்கப் போகும் புதிய படமானதிருப்பதியில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயனை அணுகியுள்ளார்களாம்.சரி என்று சொல்லி விடுவார் நயன் என்றே கூறப்படுகிறது. இப்படிக் கை நிறையப் படங்களுடனும், சிலபடங்களில் ஏக கிளாமர் காட்டியும் கலக்கி வரும் நயன்தாரா விரைவில் பி.வாசுவின் இயக்கத்தில் தெலுங்குப்படம் ஒன்றிலும் திறமை காட்டவுள்ளார்.இது தவிர இந்திப் படம் ஒன்றிலும் அவர் புக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஐயா படத்தில் அவருக்கு ரூ. 5லட்சம் மட்டுமே சம்பளமாக தரப்பட்டது. ஆனால் இப்போதோ அம்மணி வாங்கும் சம்பளம் 30 லட்சத்தைத்தொட்டு விட்டதாம்.ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சிவகாசி படத்தில் ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட்டம்போட்டுள்ளாராம் நயன்தாரா. இந்தப் பாட்டில், நயன்தாராவுக்கு பின்னணிக் குரல் கொடுத்துப் பாடியிருப்பவர்யார் தெரியுமா? விஜய்யின் அம்மா ஷோபாதான்!ஹீரோவுக்கு என்ன வயசு, நமக்கு ஒத்து வருமா என்பதை எல்லாம் நயனதாரா பார்ப்பதே இல்லை. சிம்புவுடன்நடித்துக் கொண்டே மீண்டும் சரத்குமாருடன் நடிக்க ராதிகாவின் ரேடன் நிறுவனத்திடம் அட்வான்ஸைவாங்கியுள்ளார்.அதே போல தெலுங்கில் மூத்தவரான வெங்கடேசுடனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளப் படங்களையும் விடாமல் வாங்கிப் போட்டுக் கொண்டு நடிக்கிறார்.வந்த வாய்ப்புகளையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு நயன்தாரா போகிற போக்கைப் பார்த்துமும்மொழிகளிலும் பல முன்னணி நடிகைகள் கிலியடித்துப் போய்க் காணப்படுகிறார்களாம்.நயனதாராவிடம் டேட்ஸ் இல்லாவிட்டால் தான் வேறு நடிகையைத் தேடிப் போகிறார்கள் கோலிவுட்காரர்கள்.இதனால் மூச்சுவிடக் கூட நேரமில்லாமல், கால்ஷீட் தர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்ஸ்.

    By Staff
    |

    கேரள நாட்டு கட்டழகிகளிலேயே இப்போதைக்கு ரொம்ப பிசியாக இருப்பவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர்அஸின், இன்னொருவர் நயன்தாரா. இருவருமே கேரளாவின் மலபார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்இங்கே விசேஷம்.

    எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலம் அறிமுகமாக படு வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் அஸின், தமிழ்சினிமாவின் முன்னணி நாயகர்களான விக்ரம், அஜீத், சூர்யா ஆகியோருடன் ஒரே நேரத்தில் நடித்துக் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

    அவருக்குக் கடும் போட்டியாக திகழ்பவர் நயன்தாரா. ஐயா மூலம் வந்த அவர் சந்திரமுகி மூலம் உச்சத்திற்குப்போய் விட்டார். கை நிறையப் படங்களுடன் கலக்கி வரும் நயன்தாரா எப்படிப்பட்ட ரோல் என்றாலும் உடனேமண்டையை ஆட்டி விடுகிறாராம்.


    அஸினுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நிடக்கும் கடும் போட்டியை கோலிவுட்காரர்கள் கூட்டமாக கூடிகும்மாளமிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

    சிம்புவுடன் வல்லவன், எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி, சூர்யாவுடன் கஜினி, விஜய்யுடன் சிவகாசிபடத்தில் ஒரு குத்துப் பாட்டு என படு ஸ்பீடாக போய்க் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

    இப்போது இன்னொரு முன்னணி நாயகனுடன் சேரும் வாய்ப்பும் நயன்தாராவைத் தேடி வந்துள்ளது. அது,அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு. ஏவி.எம். நிறுவனம் தயாரிக்க அஜீத் நடிக்கப் போகும் புதிய படமானதிருப்பதியில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயனை அணுகியுள்ளார்களாம்.

    சரி என்று சொல்லி விடுவார் நயன் என்றே கூறப்படுகிறது. இப்படிக் கை நிறையப் படங்களுடனும், சிலபடங்களில் ஏக கிளாமர் காட்டியும் கலக்கி வரும் நயன்தாரா விரைவில் பி.வாசுவின் இயக்கத்தில் தெலுங்குப்படம் ஒன்றிலும் திறமை காட்டவுள்ளார்.

    இது தவிர இந்திப் படம் ஒன்றிலும் அவர் புக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஐயா படத்தில் அவருக்கு ரூ. 5லட்சம் மட்டுமே சம்பளமாக தரப்பட்டது. ஆனால் இப்போதோ அம்மணி வாங்கும் சம்பளம் 30 லட்சத்தைத்தொட்டு விட்டதாம்.

    ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சிவகாசி படத்தில் ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட்டம்போட்டுள்ளாராம் நயன்தாரா. இந்தப் பாட்டில், நயன்தாராவுக்கு பின்னணிக் குரல் கொடுத்துப் பாடியிருப்பவர்யார் தெரியுமா?

    விஜய்யின் அம்மா ஷோபாதான்!

    ஹீரோவுக்கு என்ன வயசு, நமக்கு ஒத்து வருமா என்பதை எல்லாம் நயனதாரா பார்ப்பதே இல்லை. சிம்புவுடன்நடித்துக் கொண்டே மீண்டும் சரத்குமாருடன் நடிக்க ராதிகாவின் ரேடன் நிறுவனத்திடம் அட்வான்ஸைவாங்கியுள்ளார்.


    அதே போல தெலுங்கில் மூத்தவரான வெங்கடேசுடனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளப் படங்களையும் விடாமல் வாங்கிப் போட்டுக் கொண்டு நடிக்கிறார்.

    வந்த வாய்ப்புகளையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு நயன்தாரா போகிற போக்கைப் பார்த்துமும்மொழிகளிலும் பல முன்னணி நடிகைகள் கிலியடித்துப் போய்க் காணப்படுகிறார்களாம்.

    நயனதாராவிடம் டேட்ஸ் இல்லாவிட்டால் தான் வேறு நடிகையைத் தேடிப் போகிறார்கள் கோலிவுட்காரர்கள்.இதனால் மூச்சுவிடக் கூட நேரமில்லாமல், கால்ஷீட் தர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்ஸ்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X