twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவும் ஈயும் நயன்தாரா கால்ஷீட் சொதப்பலில் பொம்பள கார்த்திக் ஆக மாறி வருகிறார் என கோலிவுட்டில் குறைபட்டுக் கொள்கிறார்கள்.ஐயா, சந்திரமுகியைத் தொடர்ந்து நயன்தாரா படு பிசியாகி விட்டார். அவரது கட்டழகில் கிறங்கிப் போன ஹீரோக்கள்,நயன்தாராவைப் புக் செய்தால் தங்களது கால்ஷீட் உடனே கிடைக்கும் என்று தயாரிப்பாளர்களுக்குக் கொக்கி போட, நயன்தாராகாட்டில் அடை மழையாக இருந்து வருகிறது.வருகிற வாய்ப்புகளையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு வலுவாக காசு பார்த்து வரும் நயன்தாரா இப்போது கால்ஷீட்குழப்பத்தில் சிக்கி படு பயங்கரமாக சொதப்பி வருகிறாராம். எஸ்.ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி படத்தில் நடித்து வந்தபோது, திடீரென இடையில் படத்தை சிறிது நாட்கள் நிறுத்திவைத்திருந்தார்கள். அந்த சைக்கிள் கேப்பில் ஈ படத்திற்குக் கால்ஷீட் கொடுத்து விட்டார் நயன்தாரா. ஈ படப்பிடிப்பு தொடங்கும் நேரம் பார்த்து கள்வனின் காதலியும் மீண்டும் ஸ்டார்ட் ஆகவே குழம்பிப் போன நயன்தாரா,சூர்யாவை பகைத்துக் காள்ள விரும்பாமல் கள்வனின் காதலிக்கு போக ஆரம்பித்து விட்டார். ஈயை அம்போவென விட்டுவிட்டார்.கடுப்பாகிப் போன ஈ யூனிட்டாரும் ஹீரோ ஜீவாவும், நயன்தாராவைப் பிடிக்க அவரோ, முதலில் கள்வனின் காதலிக்குத்தான்டேட் கொடுத்திருந்தேன். இடையில் கேப் விழுந்ததால்தான் உங்களை கமிட் செய்தேன். இப்போது கள்வனை ஆரம்பித்துவிட்டார்கள். அதை முடித்து விட்டு மீண்டும் உங்களிடம் வருகிறேன் என்று கெஞ்சலாக கூறியுள்ளார். ஆனால், திருப்தி அடையாத ஈ யூனிட்டார் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி. செளத்ரியிடம் (ஹீரோ ஜீவா இவரது மகன்தான்) முறையிட்டுள்ளனர். செளத்ரியும், நயன்தாரவைக் கூப்பிட்டு வளரும் நிலையில் இப்படி கால்ஷீட் குழப்பம் செய்தால்கேரியர் என்ன ஆகும், கமிட் செய்து விட்டு அதிலிருந்து விலகுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைதியாக அட்வைஸ் செய்துஅனுப்பினாராம்.அது ஓரளவுக்கு வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. செளத்ரியின் பேச்சைக் கேட்டது முதல் ஈ படப்பிடிப்புக்கு ஒழுங்காக வந்துசெல்கிறாராம் நயன்தாரா. இருந்தாலும், வசனங்களை உணர்ச்சியில்லாமல் பேசுவதும், முகத்தில் தேவையான உணர்ச்சிகளைகாட்டாமலும், மொத்தத்தில் ஈடுபாடு இல்லாமல் ஏனோ தானேவென்று நடித்துக் கொடுப்பதாக யூனிட்டார் புலம்புகிறார்கள்.இப்படியே போனால் வீட்டில் உட்கார்ந்து ஈ விரட்ட வேண்டிய நலைதான் வரும் என்பதை மலையாளம் நன்கு தெரிந்தயாராவது நயன்தாராவுக்கு எடுத்துச் சொன்னால் நல்லது. பெரும்பாலான தவறுகள் படுக்கையறையில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டதாம் ஈ படத்தின்கதை. ரொம்ப நல்லாயிருக்கு.அப்புறம் இன்னொரு விஷம்ய.. சமீபத்தில் கை வித்தை நடிகருக்கு கதை சொல்ல ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குப் போனஇயக்குனரின் பார்வையில் பட்டுள்ளார் நயன்ஸ்ா. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?அந்த நடிகர் தங்கியிருந்த அதே அறையில் நயன்சின் நடமாட்டம் இருந்ததாம். என்ன கதை டிஸ்கஷனோ, என்னவோ...?நமக்கேன் வம்பு.

    By Staff
    |

    நயன்தாரா கால்ஷீட் சொதப்பலில் பொம்பள கார்த்திக் ஆக மாறி வருகிறார் என கோலிவுட்டில் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

    ஐயா, சந்திரமுகியைத் தொடர்ந்து நயன்தாரா படு பிசியாகி விட்டார். அவரது கட்டழகில் கிறங்கிப் போன ஹீரோக்கள்,நயன்தாராவைப் புக் செய்தால் தங்களது கால்ஷீட் உடனே கிடைக்கும் என்று தயாரிப்பாளர்களுக்குக் கொக்கி போட, நயன்தாராகாட்டில் அடை மழையாக இருந்து வருகிறது.

    வருகிற வாய்ப்புகளையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு வலுவாக காசு பார்த்து வரும் நயன்தாரா இப்போது கால்ஷீட்குழப்பத்தில் சிக்கி படு பயங்கரமாக சொதப்பி வருகிறாராம்.


    எஸ்.ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி படத்தில் நடித்து வந்தபோது, திடீரென இடையில் படத்தை சிறிது நாட்கள் நிறுத்திவைத்திருந்தார்கள். அந்த சைக்கிள் கேப்பில் ஈ படத்திற்குக் கால்ஷீட் கொடுத்து விட்டார் நயன்தாரா.

    ஈ படப்பிடிப்பு தொடங்கும் நேரம் பார்த்து கள்வனின் காதலியும் மீண்டும் ஸ்டார்ட் ஆகவே குழம்பிப் போன நயன்தாரா,சூர்யாவை பகைத்துக் காள்ள விரும்பாமல் கள்வனின் காதலிக்கு போக ஆரம்பித்து விட்டார். ஈயை அம்போவென விட்டுவிட்டார்.

    கடுப்பாகிப் போன ஈ யூனிட்டாரும் ஹீரோ ஜீவாவும், நயன்தாராவைப் பிடிக்க அவரோ, முதலில் கள்வனின் காதலிக்குத்தான்டேட் கொடுத்திருந்தேன். இடையில் கேப் விழுந்ததால்தான் உங்களை கமிட் செய்தேன். இப்போது கள்வனை ஆரம்பித்துவிட்டார்கள். அதை முடித்து விட்டு மீண்டும் உங்களிடம் வருகிறேன் என்று கெஞ்சலாக கூறியுள்ளார்.


    ஆனால், திருப்தி அடையாத ஈ யூனிட்டார் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி. செளத்ரியிடம் (ஹீரோ ஜீவா இவரது மகன்தான்) முறையிட்டுள்ளனர். செளத்ரியும், நயன்தாரவைக் கூப்பிட்டு வளரும் நிலையில் இப்படி கால்ஷீட் குழப்பம் செய்தால்கேரியர் என்ன ஆகும், கமிட் செய்து விட்டு அதிலிருந்து விலகுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைதியாக அட்வைஸ் செய்துஅனுப்பினாராம்.

    அது ஓரளவுக்கு வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. செளத்ரியின் பேச்சைக் கேட்டது முதல் ஈ படப்பிடிப்புக்கு ஒழுங்காக வந்துசெல்கிறாராம் நயன்தாரா. இருந்தாலும், வசனங்களை உணர்ச்சியில்லாமல் பேசுவதும், முகத்தில் தேவையான உணர்ச்சிகளைகாட்டாமலும், மொத்தத்தில் ஈடுபாடு இல்லாமல் ஏனோ தானேவென்று நடித்துக் கொடுப்பதாக யூனிட்டார் புலம்புகிறார்கள்.

    இப்படியே போனால் வீட்டில் உட்கார்ந்து ஈ விரட்ட வேண்டிய நலைதான் வரும் என்பதை மலையாளம் நன்கு தெரிந்தயாராவது நயன்தாராவுக்கு எடுத்துச் சொன்னால் நல்லது.


    பெரும்பாலான தவறுகள் படுக்கையறையில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டதாம் ஈ படத்தின்கதை. ரொம்ப நல்லாயிருக்கு.

    அப்புறம் இன்னொரு விஷம்ய.. சமீபத்தில் கை வித்தை நடிகருக்கு கதை சொல்ல ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குப் போனஇயக்குனரின் பார்வையில் பட்டுள்ளார் நயன்ஸ்ா. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

    அந்த நடிகர் தங்கியிருந்த அதே அறையில் நயன்சின் நடமாட்டம் இருந்ததாம். என்ன கதை டிஸ்கஷனோ, என்னவோ...?நமக்கேன் வம்பு.

      Read more about: nayanatara creates confusion
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X