குடும்ப குத்துவிளக்காக மாறிய நயன்தாரா
சென்னை: நயன்தாரா இனிமேல் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பாராம்.
மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நயன்தாரா. சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். குடும்பத்து பெண்ணாக நடித்த அவரை தமிழக மக்களுக்கு பிடித்துவிட்டது. அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து சந்திரமுகியில் நடித்தார்.
அடடா இந்த பொண்ணு வந்தவுடன் சுப்ரீம் ஸ்டார், அடுத்து சூப்பர் ஸ்டார் என்று கலக்குகிறதே என்று பலரும் வியந்தனர்.

முதல் 2 படங்களில் சேலை, பாவாடை, தாவணி
ஐயா மற்றும் சந்திரமுகியில் நயன்தாரா குடும்பத்து பெண்ணா சேலை மற்றும் பாவாடை தாவணியில் வந்தார்.

கஜினியில் கவர்ச்சிக்கு மாறிய நயன்
சூர்யா, அசின் நடித்த கஜினியில் நயன்தாராவும் நடித்தார். இதில் திடீர் என்று கவர்ச்சியாக ஒரு பாட்டுக்கு ஆடினார்.

வல்லவனில் லிப் டூ லிப்
சிம்புவுடன் நடித்த வல்லவன் படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடித்தார். மேலும் சிம்பு நயனின் உதட்டைக் கடிக்கும் போஸ்டர்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

பில்லாவில் பிகினி
அஜீத் குமாரின் பில்லா படத்தில் நயன் கவர்ச்சியின் உச்சிக்கே சென்று பிகினியில் வந்தார். நயன்தாரா தானா இது என்று ஆச்சரியப்பட வைத்தார்.

ஸ்ரீராம ராஜ்ஜியத்தில் சீதையாக நயன்
பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நயன் நடித்த தெலுங்கு படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். இதில் நயன்தாரா சீதையாக நடித்திருந்தார்.

இது கதிர்வேலன் காதல்
உதயநிதி ஸ்டாலினுடன் நயன் நடிக்கும் படம் 'இது கதிர்வேலன் காதல்'. இந்த படத்தில் அவர் குடும்பப் பாங்கான பெண்ணாக வருகிறாராம்.

கவர்ச்சிக்கு குட்பை
நயன்தாரா இனி கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டாராம். குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பாராம்.


Click it and Unblock the Notifications











