நல்லா கதறுங்க.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் எந்த நாட்டுக்கு ஜாலி டூர் போயிருக்காங்க தெரியுமா?
சென்னை: நடிகை நயன்தாரா சோசியல் மீடியா பக்கம் வந்ததும் வந்தார் ஒரு பதிவிடும் ஒவ்வொரு பதிவுகளும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி விடுகின்றன. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உஃப் ஐ அம் லாஸ்ட்" என பதிவிட்டது நயன்தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்து விட்டார் என்றே வதந்திகள் பரவ காரணமாக மாறிவிட்டது.
மேலும், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் முடிந்த திருமண நாள் கொண்டாட்டத்தின் போது புல்லாங்குழல் கலைஞர் நவீனை அழைத்து வந்து பாட்டு பாடி என்ஜாய் பண்ண வீடியோவை வெளியிட்டு சோசியல் மீடியாவை கதிகலங்க செய்து விட்டார்.

ஒன்றாக இல்லையா?: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது ஒன்றாக இல்லையா? என ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். சோசியல் இந்தியாவில் இருவரும் செய்த கலாட்டா இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணமாக மாறிவிட்டது என்கின்றனர். இந்த நிலையில் அதற்கு நாமே தீர்வை அளிப்போம் என நினைத்த நயன்தாரா விமானத்தில் குடும்பத்துடன் பறக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
நாலு பேரும் ஹேப்பியா: நயன்தாரா, விக்னேஷ் சிவன், உயிர் மற்றும் உலகம் என நான்கு பேரும் விமானத்தில் சொகுசான இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக முற்றுப்புள்ளி வச்சிட்டீங்க என கமெண்ட்டுகளை போட்டு வந்தனர்.

வெளிநாட்டில் ஜாலி டூர்: டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி படங்களில் நயன்தாரா பிஸியாக இருந்து வந்தார். மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் எல்ஐசி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அந்த படத்திற்கு பிரேக் விட்டுவிட்டு தனது மனைவி மற்றும் மகன்களுடன் சம்மர் ஹாலிடேவை முன்னிட்டு துபாயில் ஜாலி டூர் அடித்து வருகின்றனர். அதன் புகைப்படம் தற்போது இதயத்தில் கசிந்து தீயாக பரவுகிறது.
சந்தோஷத்தில் ரசிகர்கள்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது குழந்தைகளுடன் துபாயில் குட்டி டிரெய்ன் போன்ற வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப ஹேப்பியாகி ஹார்ட்டீன்களையும் ஃபயர் எமோஜிக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











