நாங்கள் பார்க்காத கிசுகிசுவா? - நயன்தாரா

நயன்தாரா மீதுள்ள காதலால் மனைவியை திட்டமிட்டு விவாகரத்து செய்துவிட்டவர் பிரபு தேவா. ஆனால் இப்போது நயன்தாரா - பிரபு தேவா இருவருக்குமே பிரச்சினை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் மனைவி மற்றும் குழந்தைகளை அவர் ரகசியமாக பார்த்ததால் கோபித்துக் கொண்ட நயன்தாரா, பிரபு தேவாவை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இதை மறுத்து நயன்தாரா மட்டும் கடந்த இரு தினங்களாக பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் பிரபு தேவா செல்போனைக் கூட அணைத்துவிட்டு, மும்பையில் ஷூட்டிங்கில் மூழ்கிவிட்டாராம்.
இந்த நிலையில், பிரபு தேவா தன் குழந்தைகளை முழுமையாக விலகி வந்தால்தான் திருமணம் என்று நயன்தாரா பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் அதையும் நயன்தாரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "எனக்கும், பிரபுதேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இடையே உறவு முன்பைவிட பலமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்.
எங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதிது அல்ல. நிறைய பார்த்து விட்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், எங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











