சிரஞ்சீவி 150: படத்திற்கு ரூ.3 கோடி, பிகினிக்கு ரூ.1 கோடி கேட்ட நயன்தாரா
சென்னை: சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 4 கோடி சம்பளமாம்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று பிசியாகிவிட்ட சிரஞ்சீவியை மீண்டும் நடிக்க வருமாறு அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி ரசிகர்களின் கோரிக்கையை ஒரு வழியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆம், சிரஞ்சீவி மீண்டும் நடிக்க வருகிறார். அவரது 150வது படத்தை வி.வி. வினாயக் இயக்க உள்ளார். படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார்.

படத்தில் சிருவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளது நம்ம நயன்தாரா தான். சிருவுடன் நடிக்க நயன்தாரா ரூ.3 கோடி கேட்க அவர்களும் ஓகே என்று கூறியுள்ளனர். இந்நிலையில் படத்தில் பிகினி காட்சி உள்ளது என்று நயனிடம் தெரிவித்துள்ளார்கள்.

பிகினியா அப்படி என்றால் இன்னும் ரூ.1 கோடி கொடுத்துவிடுங்கள் என்று கூறி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாராம் நயன். ஒரு பிகினி காட்சிக்கு ரூ.1 கோடியா? ஓமைகாட் என்று பிற நடிகைகள் வாயை பிளக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











