twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்கின் அலர்ஜியால் தவிக்கும் நயன்தாரா... கேரளாவில் ரகசிய சிகிச்சை?

    By Shankar
    |

    ஸ்கின் அலர்ஜி காரணமாக மேக்கப் போட முடியாமல் தவிக்கும் நயன்தாரா, இதற்காக ரகசிய சிகிச்சை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தமிழ், தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அமலா பால், ஹன்சிகா, அனுஷ்கா என எத்தனை நாயகிகள் வந்தாலும், நயன்தாராவுக்கு மவுசு குறையவில்லை.

    ஆனால் இந்த நேரம் பார்த்து நயன்தாராவின் உடல் நிலை குறித்து ஏகப்பட்ட வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.

    குறிப்பாக ஆந்திரத் திரையுலகில், நயன்தாராவுக்கு சரும நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் புதிய பட ஷூட்டிங்குகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ளனர் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள்.

    இதற்கிடையில் தனது சருமப் பிரச்சினைக்காக கேரளாவில் ரகசியமாக நயன்தாரா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

    English summary
    According to sources actress Nayanthara is suffering with skin allergy and getting secret treatment in Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X