Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காதல் மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது: நயன்தாரா
நயன்தாராவுக்கும் காதல் கிசுகிசுவிற்கும் பஞ்சமே இருக்காது. சிம்பு உடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா திடீரென்று அவருடனான காதலை முறித்துக்கொண்டார். பின்னர் பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் மாறினார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது.
சீதாவாக நடித்த படம் ராமராஜ்ஜியம் படம்தான் கடைசி படம் என்று அறிவித்திருந்த நிலையில் பிரபுதேவாவுடன் காதல் முறிந்ததையடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த நயன்தாரா, காதல் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது என்று கூறியிருக்கிறார். எனக்கு கடவுள் எவ்வளவோ கொடுத்து உள்ளார். அன்பு, காதல், மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எனக்காக ஒருவர் பிறந்தே இருக்கிறார். அவரையும் கடவுள் எனக்கு கொடுப்பார் என்றார்.
நான் நடித்த ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்காக வருத்தம் அடைவேன். அடுத்த படத்தில் அதனை திருத்திக் கொள்வேன். அதன் மூலம் வெற்றி பெறுவேன். அதுபோலத்தான் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் அதுபற்றி வருத்தப்படாமல் அதனை மறந்துவிட வேண்டும். கசப்பான அனுபவம்தான் நமக்கு கூடுதல் முன்னேற்றத்தை அளிக்கும்.
இன்றைய கசப்பான அனுபவம் நாளைய இனிப்பான நிகழ்வாக இருக்கும் என்று தத்துவமழை பொழிந்திருக்கிறார் நயன்தாரா.