என்ன செஞ்சா பிரபுதேவா டென்ஷனாவாரு... ரூம் போட்டு யோசிக்கிறாராம் நயனதாரா!

பிரபுதேவா, நயனதாரா ஏன் பிரிந்தார்கள் என்ற உண்மையான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். பூடகமாகக் கூட அதுகுறித்து இருவரும் பேசவில்லை, பேசவும் விரும்பவில்லை. இப்போது பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட அவரை மறைமுகமாக டீஸ் செய்தபடி இருக்கிறாராம் நயனதாரா - விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
பிரபுதோவுக்கு ஆர்யாவைப் பிடிக்காது போல. ஆர்யாவுடன் இணைந்து நடிக்காதே என்று முன்பே நயனதாராவிடம் கண்டிஷன் போட்டுநெருக்கி வந்தாராம் பிரபுதேவா. இதை மனதில் வைத்துக் கொண்டிருந்த நயனதாரா இப்போது ஆர்யாவுடன் நல்ல நெருக்கமும், நட்பும் பாராட்டி வருகிறாராம்.
அதேபோல தனது பரம எதிரியாக கருதி வந்த தனது முன்னாள் காதலர் சிம்புவையும் சமீபத்தி் தனியாக சந்தித்து தனிமையில் ஆற அமர பேசி விட்டுத் திரும்பினார். இதுவும் கூட பிரபுதேவை சீண்டிப் பார்க்கும் வேலை என்கிறார்கள்.
இப்படி அடுத்தடுத்து பிரபுதேவாவை டென்ஷனாக்கும் வகையில் நடந்து கொண்டு வருகிறாராம் நயனாரா. ஏன் இப்படி ஒரு கெட்ட பழக்கம் என்று விசாரித்தால், எல்லாம் ஒரு சுய சந்தோஷத்திற்காகத்தான் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











