வீடு தேடி வந்த ரூ.1 கோடியை வாசலில் நிற்க வைத்த நயன்தாரா

நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் தவிர்த்து விளம்பர பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. என்ன தான் அதிக சம்பளம் கொடுத்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறார்.
இந்நிலையில் பிரபல புடவை நிறுவனம் ஒன்று நயனை அணுகி எங்கள் விளம்பர தூதராக இருங்கள், உங்களுக்கு ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் என்று தெரிவித்துள்ளது. கோடியைக் கேட்டதும் நயன் உடனே ஒப்புக் கொள்ளவில்லையாம். யோசித்து கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டாராம்.
இப்படி வாசல் தேடி வந்த கோடியை நயன் ஏற்க தயங்குகிறாரே என்று கோடம்பாக்கத்தினர் ஆச்சியப்படுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











