கொடுங்க ரூ 4 கோடி... அதிர வைக்கும் நயன்தாரா!
'ஹீரோக்கள் மட்டும் படத்துக்குப் படம் சம்பளத்தை ஏற்றி, 10 கோடி, 20 கோடி என்று வாங்குகிறார்கள். அவர்களுக்கு இணையாக வெற்றியில் பங்கிருந்தும் நமக்கு மட்டும் ஓரிரு கோடிகள்தானா?'
-சமீப காலமாக இந்தக் கேள்வி நயன்தாராவைக் குடைந்து கொண்டே இருந்திருக்க வேண்டும். அம்மணி தன் சம்பளத்தை தடாலடியாக ரூ 4 கோடிக்கு உயர்த்தி விட்டாராம்.

தமிழ் சினிமா வரலாற்றில் இந்த சம்பளம் நிர்ணயித்திருக்கிற முதல் ஹீரோயின் நயன்தாரா மட்டும்தான் என்பது கோடம்பாக்கத்தின் இன்றைய பரபர பேச்சு.
கடந்த ஆண்டு தொடர்ந்து 4 ஹிட் படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. அவற்றில் இரண்டு படங்கள் இவருக்காகவே ஓடியவை. குறிப்பாக மாயா.

இப்போது திருநாள், இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன், மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களில் நயன்தாரா சம்பளம் ரூ 3 கோடி வரை. இந்தப் படங்களுக்குப் பிறகு ஒப்பந்தமாகும் படங்களுக்கு ரூ 4 கோடி என சம்பளத்தை உயர்த்தியிருக்கிறராம் நயன். தெலுங்கு இயக்குநர் ஒருவர் சமீபத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அணுகினார். அந்த படத்தில் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் ரூ 4 கோடிதான்.

உடனே நயன்தாராவுக்கு பதில் அஞ்சலியை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். தாராளமாய் பண்ணிக்கோங்க... என்னை விடுங்க என்று கும்பிடு போட்டுவிட்டாராம் நயன்தாரா!

தமிழிலும் இந்த சம்பள உயர்வை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் நயன்தாரா!


Click it and Unblock the Notifications











