கடலில் நயன்: எல்லாம் வதந்தியாம்
கார்த்திக் மகன் கௌதம், ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து மணிரத்னம் எடுத்து வரும் கடல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை கேட்டுள்ளார் என்றும், நயனும் நிச்சயம் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று உறுதியளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் நடித்தால் எங்கே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற முத்திரை விழுந்துவிடுமோ என்று நயன் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
கடைசியில் பார்த்தால் நயன் கடல் படத்தில் நடிக்கவில்லையாம். இது குறித்து வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறப்படுகிறது. அவர் தற்போது அஜீத் குமாருடன் ஒரு படம் மற்றும் பூபதி பாண்டியன் இயக்கும் இன்னொரு படத்திலும் பிசியாக இருக்கிறார்.
நயனுக்கு தமிழில் மட்டும் கிராக்கி இல்லை. தெலுங்கிலும் கோடி கொடுத்தாவது அவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்கள் தயாராக உள்ளனர். அம்மணி கையில் 3 தெலுஙகு படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












