விளக்கேத்தி வேண்டுறோம்.. கோ கொரோனா கோ.. நயன்தாராவின் போட்டோவுடன் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு!
சென்னை: நடிகை நயன்தாரா விளக்கேற்றி நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவுக்கு சமூக வலைதளத்தில் எந்த ஒரு கணக்கும் இல்லையென்றால், இன்ஸ்டாவில் நயன்தாராவின் புகைப்படங்களை காதலரான விக்னேஷ் சிவன் பதிவிட்டு வருகிறார்.

கொரோனாவால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இருவரும் குவாரண்டின் நாட்களை ஒன்றாக கழித்து வருகின்றனர்.
மக்கள் ஊரடங்கின் போது, நயன்தாரா கைதட்டும் புகைப்படத்தை பதிவிட்ட விக்னேஷ் சிவன், தற்போது, தீப ஒளியுடன் நயன்தாரா நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த போட்டோவுடன் கேப்ஷனாக தீபங்கள் ஏற்றி கடவுளையே வணங்கி வந்த மக்கள் இன்று தீபம் ஏற்றி உன்னை வணங்குகிறோம். தயசு செய்து எங்களை விட்டு போய்விடு, கொஞ்சமாவது கருணை காட்டு என்று பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial) on
சமீபத்தில் FEFSI தொழிலாளர்களுக்காக நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாய் நிதியளித்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











