தொடர்ந்து தோல்வி அடையும் படங்கள்- சரிகிறதா நயன்தாராவின் மார்க்கெட்
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகின்றன, இதனால் நயன்தாராவின் மார்க்கெட் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் நயன்தாரா, சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க ரூபாய் 3 கோடி சம்பளம் கேட்டு ஆந்திராவையே அலற வைத்தார்.

ஆனால் சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார் நயன்தாரா, இது கதிர்வேலன் காதல், நண்பன்டா, மாசு என்கிற மாசிலாமணி போன்ற 3 படங்களுமே இவர் நடிப்பில் வெளிவந்து தோல்வியை ருசித்துள்ளன.
இதனால் தமிழ்த் திரையுலகில் சரிவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











