Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யாவுடனான காதல் காட்சிகளை குறைத்ததால் நயன்தாரா கோபம்
சூர்யாவுடனான காதல் காட்சிகள் குறைந்ததால் கோபித்துக் கொண்டாராம் நயன்தாரா.
மாஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. வருகிற 29-ந் தேதி படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், நேற்று நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது மாஸ் படக் குழு. சூர்யா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால் நயன்தாரா வரவில்லை.
அப்போது இந்த படத்தில் சூர்யாவை பேயாக காட்டியுள்ளீர்கள். அதுபோல் நயன்தாராவும் இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறாரா? என்று கேட்டனர்.
உடனே இயக்குனர் வெங்கட் பிரபு, "அப்படியெல்லாம் கிடையாது. சூர்யா இந்த படத்தில் பேயாக நடிக்கவில்லை. அது படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்," என்றார்.
மேடையில் இருந்த ஞானவேல் ராஜாவோ, நயன்தாரா ஏற்கெனவே இந்த படத்தில் சூர்யாவுக்கும் தனக்கும் காதல் காட்சிகள் அதிகமாக வைக்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார். இதில், அவர் பேயா நடிச்சிருக்கிறதா நீங்க சொல்வது காதில் விழுந்தால் இன்னும் கோபமாகிவிடுவார் என்றார்.
ஓ.. அவர் பிரஸ் மீட்டுக்கு வராத ரகசியம் இதானா என கமெண்ட் பறந்தது செய்தியாளர்களிடமிருந்து.