Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரேவதி இயக்கத்தில் 'தென்னிந்திய குயினாக' நயன்தாரா?
சென்னை: பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.
கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் குயின். இந்தியில் வெளியாகி வசூலைக் குவித்த குயின் 2 தேசிய விருதுகளையும் கைப்பற்றியது.
இந்நிலையில் ஹீரோயினை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.
குயின்
திருமணத்திற்கு முதல் நாள் நாயகியின் திருமணம் நின்றுபோக, தனது தேனிலவிற்கு வாங்கிய டிக்கெட்களை எடுத்துக் கொண்டு ராணி(கங்கனா) வெளிநாடு போகிறாள். அந்தப் பயணத்தில் ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, மீண்டும் இந்தியா திரும்பும் ராணி திருமணம் குறித்து எடுக்கும் முடிவு ஆகியவை தான் படத்தின் கதை.
2 தேசிய விருதுகள்
கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகை என 2 தேசிய விருதுகளை வென்றது. 12.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 110 கோடிகளை உலகெங்கும் குவித்தது.
தமிழில்
இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமைகளை இயக்குநர் தியாகராஜன் கைப்பற்றியிருக்கிறார். முதலில் தியாகராஜன் இயக்கி பிரசாந்த் நடிப்பதாக இருந்தது. இதனால் நயன்தாரா சற்றுத் தயங்கினார். தற்போது ரேவதி இப்படத்தை இயக்க, சுஹாசினி திரைக்கதையை எழுதப் போவதாக கூறுகின்றனர்.
நயன்தாரா
ரேவதியுடன், சுஹாசினி இணைவதால் இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் சொல்லி விட்டாராம். விரைவில் இதுகுறித்து முறையான் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் நாயகனாக நடித்த அதே ராஜ்குமார் ராவ் தான் தமிழிலும் நடிக்கப் போகிறாராம்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!