Don't Miss!
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- News எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருமணம் பற்றிய கேள்வி.. நயனின் அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் விக்கி.. பிகில் ஊதலாமா வேணாமா?
தனது திருமணம் விரைவில் நடைபெறும் என சிரிப்பின் மூலம் பதிலளித்தார் நடிகை நயன்தாரா.
Recommended Video
திருப்பதி: தனது திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை நயன்தாரா பதிலளித்துள்ளார்.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக சென்று திருமலை ஏழுமலையானை வழிபட்டனர். தரிசனம் முடித்துத் திரும்பிய அவர்களுக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் சாமி பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
பின்னா், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கோயிலை விட்டு வெளியில் வந்தனர். அப்போது அவா்களைக் காண ரசிகா்கள் திரண்டதால் கோயில் முன் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவா்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனா்.
சுந்தர்.சி மிரட்டும் ஆக்ஷன் தீபாவளியன்று ட்ரெய்லர் வெளியீடு
இதற்கிடையே நயன்தாரா, விக்னேஷ் சிவன் வருகையை படம் பிடிக்க செய்தியாளர்களும் கோயில் முன் திரண்டிருந்தனர். அப்போது ஒரு செய்தியாளர், நயன்தாராவை பார்த்து எப்போது திருமணம் என கேட்டார். அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்து நயன்தாரா விடைபெற்றார்.
நயன்தாரா சிரித்ததற்கான காரணம், அவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்பதை தான் உணர்த்துகிறது என ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற சிலரோ இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை தான் நயன்தாரா உணர்த்தி இருக்கிறார் என்கின்றனர். நயன்தாரா சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்பது அந்த திருப்பதி ஏழுமலையானுக்கு தான் வெளிச்சம்.