வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க மறுத்த நயன்தாரா
சென்னை: நயன்தாரா தான் ஒரு படத்தில் நடிக்க வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கேட்டபோது அதை தர மறுத்து புது ஐடியா கொடுத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் கோபிசந்தும், நயன்தாராவும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை முதலில் பட்டத்து யானை இயக்குனர் பூபதி பாண்டியன் தான் இயக்குவதாக இருந்ததாம். ஆனால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை வெடித்ததால் படம் கைவிடப்பட்டது.
இதையடுத்து கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நயன்தாராவிடம் கேட்டுள்ளார் தயாரிப்பாளர். அதற்கு நயனோ, பணம் என்னிடமே இருக்கட்டும். வேண்டும் என்றால் அதே முன்பணத்தில் என்னை வைத்து வேறு ஒரு படம் எடுங்களேன் என்றாராம். அதன் பிறகு தான் தயாரிப்பாளர் புதிய இயக்குனரை பிடித்து வேறு ஒரு கதையை படமாக எடுக்கிறார்.
படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டாலும், ஹீரோ, ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட முன்பணத்திற்கு எந்த பங்கமும் வரவில்லை.


Click it and Unblock the Notifications












