ஹீரோக்களுக்கு தலைவலியாக மாறிய 'தலைவி' நயன்தாரா!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒன்றிரண்டு முன்னணி ஹீரோக்களுக்கு அரசியல் ஆசை வந்தது. அவர்களுக்குப் போட்டியாக நயன்தாராவும் குதித்திருப்பது அவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அறம் படத்தில் பவர் பாலிடிக்ஸை எதிர்த்து மக்கள் அரசியல் பேசியிருக்கிறார் நயன்தாரா. அவரே படத்துக்கு தயாரிப்பாளர் என்பதால் அவர் மீதான மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. படம் வெளியான மறுநாளே கேரள முன்னணி பத்திரிகை ஒன்று தமிழ்நாட்டில் நயன் தாராவை தலைவியாக ஏற்றுக்கொண்டார்கள் என்றே செய்தி வெளியிட்டது.

இது எல்லாமே நயன்தாரா அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகளாக இருக்குமோ என்ற சந்தேகம் அரசியல் ஆசையில் இருக்கும் ஹீரோக்களுக்கு இருக்கிறது.
இது ஏற்கனவே நயன் மீது ஹீரோக்களுக்கு இருந்த கடுப்பை அதிகரித்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதனாலேயே நயன்தாராவுடன் ஜோடி போடவும் தயங்குகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











