போலீஸ் மாமியாருக்கு விருந்து வைத்த நயன்தாரா!
இன்னும் கல்யாண அறிவிப்பு மட்டும் வெளியிடவில்லை. அதிகாரபூர்வமில்லாமல் தாங்கள் காதலிப்பதை உறுதி செய்து வருகிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. ஓணம் பண்டிகை, விக்கி பர்த்டே என்று வரிசையாக செலப்ரேஷன் போட்டோக்களாக நெட்டில் இறக்குகிறார்கள்.
நயனின் வருங்கால மாமியார் காவல்துறை அதிகாரியாக இருந்தவராம். கிட்டத்தட்ட நானும் ரவுடிதான் ராதிகா மாதிரி. விக்கியின் அப்பாவும் போலீஸ் சூப்பரண்டண்டாக இருந்தவர்தான். அதிலும் விக்கியின் அம்மா வடபழனி ஸ்டேஷனில் பணியாற்றியபோது ஏரியாவை பயமுறுத்திய ரவுடிகளையெல்லாம் அடிபணிய வைத்தவர்.

இதனால் மாமியார், மாமனாரை நினைத்து ஆரம்பத்தில் பயந்திருக்கிறார் நயன். ஆனால் பேசிய பின்னர் அவர்களை ரொம்பவே பிடித்துவிட்டதாம்.
சென்னையில் தான் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டுக்கே ஒருநாள் அழைத்து விருந்து வைத்திருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications