Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நகைக் கடை, ஜவுளிக் கடை திறப்பா... அய்யோ ஆளை விடுங்க சாமி! - நயன்தாரா
சென்னை: நகைக் கடை விளம்பரம் என்று கூறி அழைத்துப் போய் நேரத்தை வீணடிக்கிறார்கள், எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கிறார்கள். எனவே இனி நகைக்கடை விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றார் நயன்தாரா.
சினிமாவை விட விளம்பர படங்கள் மூலம் கணிசமாய் சம்பாதிக்கிறார்கள் நடிகைகள். குறிப்பாக நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம் தர விளம்பரதாரர்கள் தயாராக உள்ளனர். கடைத் திறப்பு விழாக்களுக்கும் இதே மாதிரி பணம் தருகிறார்கள்.
நயன்தாராவும் பல விளம்பரங்களில் முதலில் நடித்தார். இப்போது விளம்பரமும் வேண்டாம், திறப்பு விழாவும் வேண்டாம் என்கிறார்.
காரணம் என்ன?
கடை விளம்பரங்களில் கலந்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து நிறைய நேரம் உட்கார வைக்கிறார்கள். நம்மை வைத்து கொண்டே பூஜை நடத்துகின்றனர். பிறகு போட்டோ எடுக்கிறார்கள்.
நான்கு, ஐந்து தடவை வெவ்வேறு சேலைகளை மாற்றி மாற்றி உடுத்த வைத்து படம் எடுக்கிறார்கள். அந்த படங்களை வைத்து விளம்பர பலகைகள் தயார் செய்து ஹோர்டிங் வைக்கிறார்கள். ஒரு வருடம் அந்த ஹோர்டிங்குகள் அப்படியே இருக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவேதான் கடை விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கிறேன். விளம்பரப் படங்களைக் கூட ஏற்பதில்லை. ஓய்வு நேரத்தை என் வீட்டில் நிம்மதியாகக் கழிக்கிறேன்," என்றார்.