Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பக்திப் பழமாய் மாறிய நயன்தாரா
கிறிஸ்தவரான நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்தை தழுவினார். அதில் இருந்து அவர் திருப்பதி ஏழுமலையான் கோவில், குருவாயூர் பகவதி அம்மன் கோவில் என்று பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து வருகிறார்.
தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் அவர் சீதையாக நடித்தபோது கூட மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தியானம், யோகா என்று ஆன்மீகவாதியாக மாறியுள்ளார். ஷூட்டிங்கில் நேரம் கிடைத்தாலும் கூட கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பி்ததுவிடுகிறாராம்.
நயன்தாரா முன்பெல்லாம் கோபம் வந்தால் கையில் கிடைப்பதை தூக்கி எறிவார். ஆனால் தற்போது கோபம் வந்தால் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறாராம்.
யோகா, தியானம் மூலம் தனது கோபத்தை கட்டுப்படுத்தி வருகிறார் போலும். தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். மேலும் தான் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அவர் முகத்தில் விரக்தியோ, கவலையோ இல்லை மாறாக சாந்தம் குடி கொண்டுள்ளது.