உனக்கு நான் ஆன்ட்டியா? - பிரேம்ஜியை எச்சரித்த நயன்தாரா
தன்னை ஆன்ட்டி என்று பிரேம்ஜி தொடர்ந்து அழைத்ததால் எரிச்சலடைந்த நடிகை நயன்தாரா, அவரை படப்பிடிப்பு தளத்திலேயே எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூர்யா - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் மாஸ் படத்தில், பிரேம்ஜியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட்பிரபுதான் படத்தின் இயக்குநர்.
படப்பிடிப்புத் தளத்தில் எல்லோரையும் கலாய்க்கும் பிரேம்ஜி, நாயகியான நயன்தாராவையும் விட்டுவைக்கவில்லை.
அடிக்கடி அவரை ஆன்ட்டி ஆன்ட்டி என்று அழைக்க, முதலில் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த நயன், ஒரு கட்டத்தில் செம கடுப்பாகிவிட்டாராம்.
பதிலுக்கு பிரேம்ஜி அமரனை கோபமாக திட்டிய நயன்தாரா, 'உனக்கு நான் ஆன்ட்டியா? இனி இப்படிக் கூப்பிட்டால் நடப்பதே வேறு,' என்றும் எச்சரித்துள்ளார்.
இது படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்த, அமைதியாக அங்கிருந்து வெளியேறினாராம் பிரேம்ஜி.


Click it and Unblock the Notifications












