twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "கவர்ச்சி காளியாத்தா நயன்தாரா! ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தாவாக மாறி வருகிறாராம். ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார். இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்குஅதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு படத்தில் "முத்தப் புரட்சிஉள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார். இது தவிர சிம்புவின் "வல்லவன், "கிளாமர் சேட்டைக்காரன் எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி ஆகிய இரு படங்களிலும்கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போகிறார். இப்படியாக கவர்ச்சி வலம் வந்து கொண்டுள்ள நயன்தாரா, விஜய்யின் "சிவகாசி படத்தில் "கிளாமர்தாராவாக அவதாரம்பூண்டுள்ளாராம். இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. மாறாக சிங்கிள் பாட்டுக்கு சில்மிஷம் செய்யப்போகிறாராம். முன்னணி நாயகி ஒருவரை ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட சிவகாசி யூனிட் யோசித் வந்தது. யாரைப் போட்டுத் தாக்கலாம்என யோசித்தபோது அந்த யோசனையில் வந்து நயன்தாரா விழுந்துள்ளார். அணுகி கேட்டபோது, உடனே ஓ.கே. என்று சொல்லி யூனிட்டை குஷிப்படுத்தியுள்ளார். கொஞ்சம் கிளாமர் கூடுதலாக இருக்கும்,பரவாயில்லீங்களா என்று மெதுவாக கேட்டுள்ளனர். அதனாலென்ன ஒத்தப் பாட்டுன்னாலே அப்படித்தானே இருக்கம் என்றுமிகவும் எதார்த்தமாக கூறியுள்ளார் நயன். போதாதா! உடனே பெரிய தொகையை சம்பளமாக பேசி புக் செய்து விட்டார்கள். நாயகியாக நடிப்பதற்கு வாங்குவதற்குஈடான சம்பளத்தை நயன்தாரா இந்தப் பாட்டுக்காக பெற்றுள்ளாராம். விஜய்யுடன் ஆட வேண்டும் என்பதால், அவ்வப்போது டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறாராம் நயன்தாரா. இந்தப் பாட்டுக்குப்பின் சிம்ரன் இடத்தை நிச்சயமாக பிடித்து பீல்டில் இருக்கும் "பீலா நாயகிகளை வீட்டுக்கு அனுப்புவேன் பாருங்கோ என்றுஇப்போதே பெருமிதமாக கூறி வருகிறாராம் நயன்தாரா.

    By Staff
    |

    ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தாவாக மாறி வருகிறாராம்.

    ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார்.

    இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்குஅதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு படத்தில் "முத்தப் புரட்சிஉள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார்.

    இது தவிர சிம்புவின் "வல்லவன், "கிளாமர் சேட்டைக்காரன் எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி ஆகிய இரு படங்களிலும்கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போகிறார்.

    இப்படியாக கவர்ச்சி வலம் வந்து கொண்டுள்ள நயன்தாரா, விஜய்யின் "சிவகாசி படத்தில் "கிளாமர்தாராவாக அவதாரம்பூண்டுள்ளாராம். இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. மாறாக சிங்கிள் பாட்டுக்கு சில்மிஷம் செய்யப்போகிறாராம்.

    முன்னணி நாயகி ஒருவரை ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட சிவகாசி யூனிட் யோசித் வந்தது. யாரைப் போட்டுத் தாக்கலாம்என யோசித்தபோது அந்த யோசனையில் வந்து நயன்தாரா விழுந்துள்ளார்.

    அணுகி கேட்டபோது, உடனே ஓ.கே. என்று சொல்லி யூனிட்டை குஷிப்படுத்தியுள்ளார். கொஞ்சம் கிளாமர் கூடுதலாக இருக்கும்,பரவாயில்லீங்களா என்று மெதுவாக கேட்டுள்ளனர். அதனாலென்ன ஒத்தப் பாட்டுன்னாலே அப்படித்தானே இருக்கம் என்றுமிகவும் எதார்த்தமாக கூறியுள்ளார் நயன்.

    போதாதா! உடனே பெரிய தொகையை சம்பளமாக பேசி புக் செய்து விட்டார்கள். நாயகியாக நடிப்பதற்கு வாங்குவதற்குஈடான சம்பளத்தை நயன்தாரா இந்தப் பாட்டுக்காக பெற்றுள்ளாராம்.

    விஜய்யுடன் ஆட வேண்டும் என்பதால், அவ்வப்போது டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறாராம் நயன்தாரா. இந்தப் பாட்டுக்குப்பின் சிம்ரன் இடத்தை நிச்சயமாக பிடித்து பீல்டில் இருக்கும் "பீலா நாயகிகளை வீட்டுக்கு அனுப்புவேன் பாருங்கோ என்றுஇப்போதே பெருமிதமாக கூறி வருகிறாராம் நயன்தாரா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X