Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேரவன் தர மறுத்ததால் இயக்குநரிடம் சண்டை போட்ட நயன்தாரா!
அனாமிகா படத்தின் ஷூட்டிங்கின்போது தனக்கு கேரவன் தர மறுத்ததால் இயக்குநருடன் கடுமையாக சண்டை போட்டாராம் நடிகை நயன்தாரா.
இந்தியில் ஹிட்டான 'கஹானி' படத்தை தமிழ், தெலுங்கில் 'அனாமிகா' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர்.
கஹானியில் வித்யா பாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்குகிறார்.
மும்பை, ஹைதராபாத் பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என்பதால் பொதுவாக அவருக்கு கேரவன் வசதி உண்டு. ஆனால் 'அனாமிகா' படப்பிடிப்பில் அவருக்கு கேரவன் கிடையாதாம்.
அதுமட்டுமல்ல, சேகர் கம்முலா தனது படங்களில் நடிகர், நடிகைகள் கேரவன்களை பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்.
ஆனால் இயக்குநரின் கொள்கையைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.. கட்டாயம் கேரவன் வேண்டும் என நயன்தாரா வற்புறுத்த, சண்டை மூண்டது.
கேரவன் இல்லாமல் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா தன் கடைசி அஸ்திரத்தை வீச, சேகர் கம்முலாவின் கொள்கை காணாமல் போனது. உடனடியாக நயனுக்கு சொகுசு கேரவன் வழங்கப்பட்டது.