நடுரோட்டில் சண்டை போட்ட நஸ்ரியா
திருவனந்தபுரம் : நம்ம நஸ்ரியாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு சமீபத்தில் நஸ்ரியா ஒரு வேலையைச் செய்திருக்கிறார். நாட்டையே திருத்தற வேலை அப்படின்னு யாரும் தப்பா நினைச்சிடாதிங்க, நஸ்ரியா போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருந்திருக்காங்க. இந்த பகத் பாசில் சும்மா இல்லாம ஒரு காரை வாங்கி தன்னோட அன்புப் பரிசா நஸ்ரியாவுக்கு கொடுக்க அந்தக் கார வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம தன்னோட உறவினர்களைப் போய்பார்த்துட்டு வந்திருக்காங்க நஸ்ரியா.

அதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சி, திரும்ப வர்றப்ப கொச்சினுக்கு ஒரு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில ஒரே டிராபிக்கா இருந்திருக்கு. இதனால பொண்ணு காரை நத்தை வேகத்தில ஓட்டிட்டு வந்திருக்கு, தீடிர்னு யாரோ ஒரு புண்ணியவான் நஸ்ரியாவோட காரை லேசா உரசிட ஆரம்பிச்சது கிரகம் அந்தக் காரை உரசினவருக்கு.
காரை விட்டு பயங்கரக் கோபமா இறங்கின நஸ்ரியா எப்படி என்னோட கார் மேல நீ உன்னோட காரக் கொண்டுவந்து உரசலாம் அப்படி இப்படின்னு பயங்கரமா கத்த ஆரம்பிச்சிருக்காங்க ரோட்டில போன பசங்க ஏ நம்ம நஸ்ரியா டான்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க கொஞ்ச நேரத்தில கூட்டம் திமுதிமுன்னு குவிஞ்சி போச்சாம் அந்த இடத்தில. கடைசியில போலீஸ் வந்து நஸ்ரியாவ சமாதானம் செஞ்சு அனுப்பி வச்சிருக்காங்க.
பூவிற்குள் ஒரு புயல்..........


Click it and Unblock the Notifications











