'டூப் தொப்புள்' விவகாரம்... தனுஷ் ஆதரவு எனக்குள்ளது - நஸ்ரியா
சென்னை: நையாண்டி படத்தில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரத்தில் தனக்கு படத்தின் ஹீரோ தனுஷின் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளார் நடிகை நஸ்ரியா.
எது எதெற்கோ டூப் போடும் தமிழ் சினிமாவில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரம் சூட்டைக் கிளப்பியுள்ளது.
டூப் போட்டு எனக்குப் பதில் வேறு ஒரு தொப்புளை சேர்த்து விட்டதாக புகார் கூறியுள்ள நஸ்ரியா இந்த விவகாரம் காரணமாக அப்செட்டாகியுள்ளாராம்.
ஏற்கனவே ஹாட் நாயகியாக பார்க்கப்படும் நஸ்ரியா, ராஜா ராணி ஹிட் ஆகியுள்ளதால் சூப்பர் ஹிட் நாயகியாகியுள்ளார்.
தற்போது தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள படம்தான் நய்யாண்டி. அதில்தான் சர்ச்சை கிளம்பியுள்ளது. தொப்புளுக்கு டூப் போட்டு விட்டதாக கூறுகிறார் நஸ்ரியா. இந்த விவகாரத்தில் தனக்கு நடிகர் தனுஷின் ஆதரவும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது நய்யாண்டி தவிர எட்டுப் படங்கள் கையில் இருப்பதாக கூறுகிறார் நஸ்ரியா. இந்த நிலையில் அவரது தொப்புள் விவகாரம் வெடித்துள்ளது கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications












