Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஊஞ்சலாடும் பார்பி கேர்ள்... ரிது வர்மாவை வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை : துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா.
கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் இப்பொழுது உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நீங்கள் தான் குரூப் சேர்க்கிறீர்கள்… அண்ணாச்சியிடம் எகிறிய அபிஷேக்… அதிரவைக்கும் 3வது ப்ரோமோ!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வரும் இவர் இப்பொழுது பார்பி கேர்ள் போல ஊஞ்சலில் க்யூட்டாக எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
பெல்லி சூபுளு
தெலுங்கில் பாட்ஷா படத்தில் மூலம் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான நடிகை ரிது வர்மா அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பெல்லி சூபுளு படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். இப்பொழுது இந்த திரைப்படம் தமிழில் ஓமணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.
சுவாரசியமான ஹீரோயின்
தமிழ் ரசிகர்கள் அனைவரும் இவரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க வேலையில்லா பட்டதாரியில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் சென்ற வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தார். பல படங்களில் க்யூட்டான நடிகையாக வந்த இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய இந்த திரைப்படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றிக்குப் பிறகு தமிழிலும் அதிக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த வகையில் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த தீனி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நித்யா மேனன் அதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
Recommended Video
பார்பி கேர்ள் ஊஞ்சலாடுகிறது
கடைசியாக நானிக்கு ஜோடியாக தெலுங்கில் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தமிழில் அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தயாராகி பல மாதங்களாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ஓகே ஓக ஜீவிதம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இதில் சர்வானந்த் ஹீரோவாக நடிகை அமலா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் ரிது வர்மா இப்பொழுது துபாய் டவர் பின்னே தெரிய ஊஞ்சலில் செம க்யூட்டாக உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்பி கேர்ள் ஊஞ்சலாடுகிறது என வர்ணித்து வருகின்றனர்.