Don't Miss!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோயில்களுக்கு ஏன் செலவு செய்றீங்க? ஜோதிகாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வரிந்து கட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: விருது விழாவில் கோயில்களுக்கு ஏன் செலவு செய்கிறீர்கள் என பேசிய நடிகை ஜோதிகாவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது விழா ஒன்றில் பங்கேற்றார் நடிகை ஜோதிகா. அந்த விருது நிகழ்ச்சி அண்மையில் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.
அதில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. ஒரு முறை ஷுட்டிங்குக்காக சென்றபோது அழகாக இருக்கும், கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
ஹாட்டா இருக்குறது க்ரைம்ன்னா.. என்னை அரெஸ்ட் பண்ணுங்க.. கெத்துக்காட்டும் நிவேதா பெத்துராஜ்!
வாயால் சொல்ல முடியாது
நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி உள்ளது. அப்போது எனக்கு ஷுட்டிங் அங்குள்ள ஹாஸ்பிட்டலில் இருந்தது. ஹாஸ்பிட்டலுக்கு சென்றபோது அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததை பார்த்தேன். நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.
பள்ளிகள் முக்கியம்
கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். இதை நான் ராட்சசி படத்திலும் சொல்லியிருக்கிறேன். இயக்குநர் கௌதம் ராஜும் சொல்லியிருக்கிறார்.
பராமரிக்க பணம் கொடுங்கள்
ஹாஸ்பிட்டலை பார்த்தப் பிறகு நான் கோவிலுக்குள் போகவில்லை. பள்ளிகளும் மருத்துவமனைகளும் தான் முக்கியம். கோவில்களுக்கு செலவு செய்வது உண்டியலில் காசு போடுவதைவிட பள்ளிகள் மருத்துவமனைகளை பராமரிக்க பணம் கொடுங்கள் என்று கூறியிருந்தார் ஜோதிகா.
விளாசும் நெட்டிசன்ஸ்
ஜோதிகாவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜோதிகாவின் பேச்சின் வீடியோவை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரையும் விளாசி வருகின்றனர்.
ஒரு கோடியில் கார் எதற்கு?
ஜோதிகாவின் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், 5 கோடியில் வீடு எதற்கு,,,? ஒரு கோடியில் கார் எதற்கு,,,,? 300 கோடிக்கு சொத்து எதற்கு,,? ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான் என கடுமையாக சாடியிருக்கிறார்.
விருது விழா தேவையா?
இவ்வளவு செலவு செய்து கோயிலுக்கு பெயிண்ட் அடிக்கணுமா? என்று கேள்வி கேட்க தெரிந்த ஜோதிகாவுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து இந்த விழா தேவையா என்று கேட்க தெரியவில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் செலவு செய்த தொகையை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுக்க சொல்லி இருக்கலாமே? என்று தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.