Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வயிற்றில் என்ன தழும்பு... நந்திதாவிடம் ரசிகர் கேட்ட ஏடாகூட கேள்வி !
சென்னை : நடிகை நந்திதா ஸ்வேதா, ரசிர்களுடன் கலந்துரையாடிய போது, வரம்பு மீறிய ரசிகர் ஒருவர், நந்திதாவின் புகைப்படத்தை பதிவிட்டு ஏடாகூட கேள்வி கேட்டுள்ளார்.
நடிகை நந்திதா தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக நிகழ்ந்து வருகிறார்.
ஐபிசி 376, இடம் பொருள் ஏவல், வணங்காமுடி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ரோஜாவே தமிழ் பேசு.. வைரமுத்துவின் நாட்படு தேறல் 2 ஆரம்பம்.. அக்ஷரா ரெட்டி அசத்தல்!
அட்டக்கத்தியில்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். அந்த திரைப்படத்தை அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி" என்ற வசனம் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.
பல படங்களில்
இதையடுத்து, எதிர்நீச்சல், தளபதியின் புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிது நேரமே அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது நந்திதாவின் நடிப்பு இருந்தது.
நெஞ்சம் மறப்பதில்லை
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நந்திதா. அந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வயிற்றில் என்ன தழும்பு
சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் நந்திதா, ரசிர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். சமீபத்தில் ஒரு ரசிகர் , வயிற்றில் என்ன தழும்பு என ஏடாகூடமாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கும் பதிலளித்துள்ள நந்திதா, பலரும் என் வயிற்றில் இருக்கும் தழும்பு பற்றியே கேள்வி கேட்கின்றனர். நான், Dhee என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருப்பதால் தொடர்ந்து, அமர்ந்து இருந்தேன். அப்போது நான் அணிந்திருந்த பாவாடையால் வந்த தழும்பு தான் அது. இதற்காக ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.