Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கலாச்சாரம் பற்றி பேசிய ஓவியா.. பழைய ட்வீட்டை தோண்டி எடுத்து கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : கலாச்சாரம் பற்றி பேசும் நீங்களா? ரசிகரிடம் அப்படி நடந்து கொண்டீர்கள் என்று முடிந்த விவகாரத்தை நெட்டிசன்ஸ் தோண்டி எடுத்து வருகின்றனர்.
களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்த ஓவியா, மெரினா, கலகலப்பு , மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
அப்போ ஓவியா.. இப்போ திவ்யா.. ஆபாச பேச்சு.. பயில்வான் ரங்கநாதன் மீது புகார் கொடுத்த சமூக ஆர்வலர்!
ஓவியா
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று, மாபெரும் வரவேற்பையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய உண்மையான சுபாவம் மற்றும் குணத்தால் அனைவரையும் கவர்ந்திழுத்தவர் ஓவியா.
எதையும் மறைக்க வேண்டாம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவுக்கு படவாய்ப்பு குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை. அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய ஓவியா, கலாச்சாரம் என்ற பெயரில் குழந்தைகளிடம் எதையும் மறைக்க வேண்டாம். ஓபனாக எல்லாவற்றையும் பேச வேண்டும் என்றார்.
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்
பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்ற செயல்பாடுகளிலும் ஆண்கள் ஈடுபட மாட்டார்கள் என்று கல்லூரி விழாவில் பேசியிருந்தார்.
இது சரியா?
ஒவியா பேசியது இணையத்தில் வைரலான நிலையில், கடந்த ஆண்டு, ரசிகர் ஒருவர் தற்போது, சுய இன்பம் செய்து முடித்தேன் என்று கூறி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு பதிலாக, சுயஇன்பம் நல்லது! நான் சொல்வது சரியானதா? மேம் என கேட்டிருந்தார். அதற்கு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக உண்மை என்று பதிலளித்திருந்தார் ஓவியா. இது அப்போதே சர்ச்சையானது.
தோண்டி எடுக்கும் நெட்டிசன்ஸ்
இந்த விவகாரத்தை தற்போது தோண்டி எடுத்துள்ள நெட்டிசன்ஸ், தற்போது கலாச்சாரம் பற்றி பேசும் நீங்கள், கடந்த ஆண்டு உண்மைதான் என்று சொன்னது ஏன் என்றும்... இல்லை அந்த விஷயத்தை மறந்துவிட்டீர்களா ? என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த விஷயத்தை தற்போது நெட்டிசன்ஸ் வைரலாக்கி வருகின்றனர்.