நாகசைதன்யாவுக்காக சமந்தா குத்திய டாட்டூ... அது மட்டும் வேண்டாம்… ரசிகர்களுக்கு அட்வைஸ் !
சென்னை : நடிகை சமந்தா டாட்டூ மட்டும் குத்திக்கொள்ளாதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
நடிகை சமந்தா அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது.
சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும்படி, குடும்பத்தை நடத்தி வந்தார். யார் கண் பட்டதோ நாகசைதன்யாவும் சமந்தாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

சமந்தா
இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் சமந்தாவை குறை கூறும் விதமாகவே பல்வேறு வதந்திகள் பரவியது. சமந்தா சுயநலவாதி, கர்ப்பத்தை கலைத்தார், குழந்தை பெற்று தர மறுத்தார், வேறு ஒருவருடன் நெருங்கிய உறவில் இருந்தார் என்பது போல் சிலர் சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட அதுகும் நெருப்பாக எரிந்தது.

3 இடத்தில் டாட்டூ
நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் ஒருவர், டாட்டூ குத்திக் கொள்வது பற்றி கேட்டார். அதற்கு சமந்தா தயவு செய்து டாட்டூ மட்டும் குத்திக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். சமந்தா தன்னுடைய காதல் கணவர் நினைவாக தன்னுடைய உடலில் 3 இடங்களில் டாட்டூ குத்தி உள்ளார்.

சாய் டாட்டூ
நடிகை சமந்தா முதுகில் 'Ye Maaya Chesave' என்ற படத்தின் நினைவாக 'ymc' என்ற டாட்டூம், மணிக்கட்டுடில் இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தா மற்றும் நாகசைதன்யாவும் ஒரே மாதிரி பச்சை குத்தியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நாகசைதன்யாவின் செல்லப்பெயரான சாய் டாட்டூ ஒன்றையும் தன்னுடைய முதுகு பகுதியில் குத்தியுள்ளார்.

அறிவுரை கூறிய சமந்தா
தற்போது நாகசைதன்யாவை சமந்தா பிரிந்து விட்ட நிலையில், அந்த டாட்டூவை பார்க்கும் போது நிச்சயம் வருத்தமடைந்து இருப்பார். இதனால் தான் சமந்தா இப்படி ஒரு அறிவுரையை ரசிகருக்கு அவர் கூறியுள்ளார். என்னத்தான், படத்தில் பிஸியாக இருக்கிறார், உடற்பயிற்சி செய்கிறார் என்றாலும், நாகசைதன்யாவை பிரிந்ததால், நிச்சயம் மன வேதனை அடைந்து இருப்பார்.


Click it and Unblock the Notifications











