நிகிதா, நிகிதா! குறும்பு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குறும்பு செய்ய வந்தவர் நிகிதா. வந்தவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவுஅளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவ்வளவு ஜோரான ஆதரவைத் தரவில்லை. இருந்தாலும் சத்ரபதி படத்தில் நடித்தார் நிகிதா. அம்புட்டுத் தான், அதற்குப் பிறகு காணாமல் போனார். சின்னதாக ஒருஇடைவெளியை விட்டிருந்த நிகிதா மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். சிபிராஜுக்கு ஜோடியாக வேல்வேல் படத்தில் தலை காட்டுகிறார் நிகிதா. இதில் சத்யராஜும், குஷ்புவும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஜோடி போட்டு நடிக்கிறார்கள். என்னாச்சு, இவ்ளோ பெரிய கேப் என்று நிகியிடம் கொக்கியைப் போட்டபோது,அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. பக்கத்தில் இருந்து பார்த்துக்க வேண்டிய நிலையாகி விட்டது. அதனால் தான் நிறையப் படங்களில் நடிக்க முடியவில்லை.இப்போ அம்மா ஆல்ரைட், அதனால் மீண்டும் இதோ நடிக்க வந்து விட்டேன். இனிமேல் அதிக படங்களில் நடிப்பேன். வேல்வேல் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே எனக்கு ஜாலியாகி விட்டது. கிராமத்துப் பெண்ணாக இதில் வருகிறேன்.பாவாடை, தாவணி தான் எனது காஸ்ட்யூம். கலக்கியுள்ளேன். குஷ்பு மேடம் தான் என்னோட அம்மாவா இந்தப் படத்திலவர்றாங்க. எந்தக் காஸ்ட்யூம் என்றாலும் நான் பின்னி எடுப்பேன். கிளாமர் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை. கிளாமர் காட்டினால்தப்பும் இல்லை. இப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினால் அதை மறுக்க முடியாது, கூடவும் கூடாது. ஒரு ஹீரோ என்றால் அடிதடியான ஆக்ஷனைத் தான் அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதேபோல, ஹீரோயினிடம்என்ன எதிர்பார்ப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும். இளமையான, கிளாமரான, அழகான பெண்ணாகத் தான் அவர்களைபார்க்கிறார்கள். எனவே தான் கவர்ச்சி காட்டுவதில் தப்பே இல்லை எனது தாழ்மையான அபிப்பிராயம். அழகுக்கு எல்லையில்லை. எப்படிவேண்டுமானாலும் நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் கிளாமருக்கு எல்லை உள்ளது. அதைத் தாண்டினால் தான்அசிங்கமாகி விடுகிறது. அதை அனைவரும் உணர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை. என் உடல் அழகை நான் ரொம்பவும் ரசித்துப் பார்க்கிறேன்.இதற்காக ஜிம்முக்குச் சென்று உடற் பயிற்சியும் செய்கிறேன். உடல் நன்றாக இருந்தால் மனசு நல்லாருக்கும். மனசு நல்லாருந்தால் நாம் நினைப்பது நல்லதாக இருக்கும், நினைப்பதுநன்றாக இருந்தால், எந்தக் காரியம் செய்தாலும் நன்றாகவே இருக்கும் (சரி, சரி, போதும்!) நிகிதா பேசினாலே அழகாக இருக்கிறது!
குறும்பு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குறும்பு செய்ய வந்தவர் நிகிதா. வந்தவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவுஅளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவ்வளவு ஜோரான ஆதரவைத் தரவில்லை.
இருந்தாலும் சத்ரபதி படத்தில் நடித்தார் நிகிதா. அம்புட்டுத் தான், அதற்குப் பிறகு காணாமல் போனார். சின்னதாக ஒருஇடைவெளியை விட்டிருந்த நிகிதா மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
சிபிராஜுக்கு ஜோடியாக வேல்வேல் படத்தில் தலை காட்டுகிறார் நிகிதா. இதில் சத்யராஜும், குஷ்புவும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஜோடி போட்டு நடிக்கிறார்கள். என்னாச்சு, இவ்ளோ பெரிய கேப் என்று நிகியிடம் கொக்கியைப் போட்டபோது,அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.
பக்கத்தில் இருந்து பார்த்துக்க வேண்டிய நிலையாகி விட்டது. அதனால் தான் நிறையப் படங்களில் நடிக்க முடியவில்லை.இப்போ அம்மா ஆல்ரைட், அதனால் மீண்டும் இதோ நடிக்க வந்து விட்டேன். இனிமேல் அதிக படங்களில் நடிப்பேன்.
வேல்வேல் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே எனக்கு ஜாலியாகி விட்டது. கிராமத்துப் பெண்ணாக இதில் வருகிறேன்.பாவாடை, தாவணி தான் எனது காஸ்ட்யூம். கலக்கியுள்ளேன். குஷ்பு மேடம் தான் என்னோட அம்மாவா இந்தப் படத்திலவர்றாங்க.
எந்தக் காஸ்ட்யூம் என்றாலும் நான் பின்னி எடுப்பேன். கிளாமர் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை. கிளாமர் காட்டினால்தப்பும் இல்லை. இப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினால் அதை மறுக்க முடியாது, கூடவும் கூடாது.
ஒரு ஹீரோ என்றால் அடிதடியான ஆக்ஷனைத் தான் அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதேபோல, ஹீரோயினிடம்என்ன எதிர்பார்ப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும். இளமையான, கிளாமரான, அழகான பெண்ணாகத் தான் அவர்களைபார்க்கிறார்கள்.
எனவே தான் கவர்ச்சி காட்டுவதில் தப்பே இல்லை எனது தாழ்மையான அபிப்பிராயம். அழகுக்கு எல்லையில்லை. எப்படிவேண்டுமானாலும் நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் கிளாமருக்கு எல்லை உள்ளது. அதைத் தாண்டினால் தான்அசிங்கமாகி விடுகிறது.
அதை அனைவரும் உணர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை. என் உடல் அழகை நான் ரொம்பவும் ரசித்துப் பார்க்கிறேன்.இதற்காக ஜிம்முக்குச் சென்று உடற் பயிற்சியும் செய்கிறேன்.
உடல் நன்றாக இருந்தால் மனசு நல்லாருக்கும். மனசு நல்லாருந்தால் நாம் நினைப்பது நல்லதாக இருக்கும், நினைப்பதுநன்றாக இருந்தால், எந்தக் காரியம் செய்தாலும் நன்றாகவே இருக்கும் (சரி, சரி, போதும்!)
நிகிதா பேசினாலே அழகாக இருக்கிறது!


Click it and Unblock the Notifications