Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நிலாவுக்கு ஆபாச மெயில்-போலீஸில் புகார்!
பஞ்சாபைச் சேர்ந்தவர் நிலா. இவரது இயற்பெயர் மீரா சோப்ரா. தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க வந்தார். சில படங்களிலும் நடித்தார். பின்னர் தமிழிர் இவருக்கு மார்க்கெட் டவுன் ஆகவே டெல்லிக்குப் போய் விட்டார். தற்போது டெல்லியில்தான் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு சமீப நாட்களாக தொடர்ந்து ஆபாச இமெயில்கள் வருகிறதாம். குறிப்பிட்ட ஐடியிலிருந்து மட்டும் தொடர்ந்து இந்த ஆபாச இமெயில்கள் வந்து கொண்டிருந்ததால் அப்செட் ஆன நிலா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த மெயில்கள் டெல்லி மற்றும் பிரான்ஸிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளதாம்.
இதற்கிடையே, இந்த மெயில்களை அனுப்பியது யார் என்பது தனக்குத் தெரியும் என நிலா கூறியுள்ளார். ஆனால் அதை வெளியில் சொல்ல மாட்டேன். எனக்கு எதிராக செயல்படும் அவர்கள் குறித்து விரைவில் மீடியாக்களுக்குத் தகவல் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் நிலா.
நிலா தற்போது எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. வீட்டோடு ஓய்வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.