twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிலாவுக்கு ஆபாச மெயில்-போலீஸில் புகார்!

    By Sudha
    |

    Nila
    மீரா சோப்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நிலாவுக்கு ஆபாச இமெயில்கள் தொடர்ந்து வருகிறதாம். இதுகுறித்து டெல்லி போலீஸில் அவர் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாபைச் சேர்ந்தவர் நிலா. இவரது இயற்பெயர் மீரா சோப்ரா. தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க வந்தார். சில படங்களிலும் நடித்தார். பின்னர் தமிழிர் இவருக்கு மார்க்கெட் டவுன் ஆகவே டெல்லிக்குப் போய் விட்டார். தற்போது டெல்லியில்தான் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கு சமீப நாட்களாக தொடர்ந்து ஆபாச இமெயில்கள் வருகிறதாம். குறிப்பிட்ட ஐடியிலிருந்து மட்டும் தொடர்ந்து இந்த ஆபாச இமெயில்கள் வந்து கொண்டிருந்ததால் அப்செட் ஆன நிலா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த மெயில்கள் டெல்லி மற்றும் பிரான்ஸிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளதாம்.

    இதற்கிடையே, இந்த மெயில்களை அனுப்பியது யார் என்பது தனக்குத் தெரியும் என நிலா கூறியுள்ளார். ஆனால் அதை வெளியில் சொல்ல மாட்டேன். எனக்கு எதிராக செயல்படும் அவர்கள் குறித்து விரைவில் மீடியாக்களுக்குத் தகவல் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் நிலா.

    நிலா தற்போது எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. வீட்டோடு ஓய்வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Nila has given a complaint with Delhi police. She has been recieving obscene mails for the past few weeks. So she has lodged the complaint.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X