Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிலாவுக்கு ஆபாச மெயில்-போலீஸில் புகார்!
பஞ்சாபைச் சேர்ந்தவர் நிலா. இவரது இயற்பெயர் மீரா சோப்ரா. தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க வந்தார். சில படங்களிலும் நடித்தார். பின்னர் தமிழிர் இவருக்கு மார்க்கெட் டவுன் ஆகவே டெல்லிக்குப் போய் விட்டார். தற்போது டெல்லியில்தான் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு சமீப நாட்களாக தொடர்ந்து ஆபாச இமெயில்கள் வருகிறதாம். குறிப்பிட்ட ஐடியிலிருந்து மட்டும் தொடர்ந்து இந்த ஆபாச இமெயில்கள் வந்து கொண்டிருந்ததால் அப்செட் ஆன நிலா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த மெயில்கள் டெல்லி மற்றும் பிரான்ஸிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளதாம்.
இதற்கிடையே, இந்த மெயில்களை அனுப்பியது யார் என்பது தனக்குத் தெரியும் என நிலா கூறியுள்ளார். ஆனால் அதை வெளியில் சொல்ல மாட்டேன். எனக்கு எதிராக செயல்படும் அவர்கள் குறித்து விரைவில் மீடியாக்களுக்குத் தகவல் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் நிலா.
நிலா தற்போது எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. வீட்டோடு ஓய்வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.