Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கள்ளக்காதலரின் மனைவி கொலையில் எனக்குத் தொடர்பில்லை- நிலா
சென்னையில் நடிகை ரஞ்சிதா போலீஸ் கமிஷனரை சந்தித்த அதே நாளில் நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா, தனது கள்ளக்காதலரின் மனைவி கொலை வழக்கு தொடர்பாக ஹரியானா டிஜிபியை சந்தித்துள்ளார்.
குர்கானைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நடிகை நிலாவுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் சுமித் தான் தனது மனைவியைக் கொன்று தொங்கவிட்டுள்ளார் என்று ருச்சியின் சகோதரி ஷெபாலி தெரிவித்தார். இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிலா கைதாகலாம் என்று கூறப்பட்டது. நிலாவைப் பிடிக்க டெல்லிக்குப் போலீஸ் படையும் விரைந்தது.
இந்நிலையில் திடீரென நிலா ஹரியானா டிஜிபியை சந்தித்து பேசியுள்ளார்.
அன்மையில் அவரைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்து வருத்தம் அடைந்துள்ளார் நிலா. அதனால் தான் டிஜிபியை சந்தித்து பேச முடிவு செய்தார் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.
நிலா விவகாரத்தில் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், டிஜிபியை நிலா சந்தித்து என்ன பேசினார் என்பது தெரியவில்லை.