Don't Miss!
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நிலாவின் 'மழை'
எங்கேயோ போயிருக்க வேண்டிய நிலா, எங்கேயும் வாய்ப்பு கிடைக்காமல் தொய்ந்து போனார், துவண்டு போனார். அன்பே ஆருயிரே படத்திற்குப் பிறகு ஒரு படமும் நிலாவின் பெயரைச் சொல்லவில்லை. மாறாக அவர் செய்த கால்ஷீட் சொதப்பல்தான் கொடி கட்டிப் பறந்தது.
இந்த நிலையில் லேட்டஸ்டாக வந்த மருதமலை சூப்பர் ஹிட் ஆனதால், நிலாவுக்கும் கொஞ்சம் சந்தோஷம். அதன் பின்னர் அவருக்குத் தமிழில் நிறையப் படங்கள் வரவில்லை என்றாலும் கூட தெலுங்கில் நிறையப் பட வாய்ப்புகள் வந்துள்ளனவாம்.
தற்போது எம்.எஸ்.ராஜுவின் இயக்கத்தில் உருவாகும் வானா (அதாவது மழை) என்ற படத்தில் நிலா நடித்து வருகிறாராம். இதில் அவருக்கு ஜோடி உன்னாலே உன்னாலே படத்தின் நாயகன் வினய்.
தமிழில் தற்போது பரத்துடன் நடித்து வந்த கில்லாடியும், தெலுங்கில் சத்யம் சிவம் சுந்தரம் படத்திலும் நடித்துள்ளார் நிலா. இரு படங்களும் முடங்கிக் கிடக்கின்றனவாம். இதனால் கொஞ்சம் போல விசனத்திலும் இருக்கிறார் நிலா.
இந்த இரண்டு படங்களையும் நிலா ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். இவை இரண்டும் வந்தால் நிச்சயம் நான் இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் நாயகியாகி விடுவேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நிலா.
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ரொம்ப நல்லவர்கள், ரசனையானவர்கள் எனப் புகழும் நிலா, இந்திப் படத்தில் நடிக்கும் எண்ணமே இல்லை என்றும் கூறுகிறார்.