தொழிலதிபரை விட்டுவிட்டு இந்தி நடிகருடன் நிலா காதல்!

அன்பே ஆருயிரே' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நிலா.
நிலாவும், ஆர்யாவும் காதலிப்பதாக முதலில் கிசுகிசுத்தனர். பின்னர் மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் தீவிர காதலில் இருப்பதாக நிலா குறித்து செய்திகள் வந்தன.
ஒருநாள் அந்த தொழில் அதிபர் மனைவி திடீரென மரணம் அடைய, அதற்கு நிலாதான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது. போலீசாரும் நிலாவிடம் விசாரணை நடத்தினர்.
இப்போது மீரா சோப்ரா என பெயர் மாற்றிக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நிலா.
மேலும் தொழிலதிபருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளாராம்.
இப்போது இந்தி நடிகர் அர்ஜன் பாஜ்வாவை நிலா காதலிப்பதாக புது தகவல் பரவியுள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிலா நடத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் அர்ஜன் பாஜ்வாவும் தவறாமல் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











