மீரா சோப்ராவாக மீண்டும் வந்த நிலா
அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நிலா.
சிறிதுகாலம் காணாமல் போயிருந்தவர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'இசை' படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்தார். அதன்பின் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் லண்டனில் செட்டில் ஆகி அப்பாவின் பிசினஸை கவனித்து வந்தார்.

ஆனால் ஆடிய கால் சும்மா இருக்குமா... இப்போது மீண்டும் நடிக்க வந்து, வந்த வேகத்தில் பிஸியும் ஆகிவிட்டார். இங்கே இல்லை... பாலிவுட்டில்.
தன்னுடைய ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரிலேயே இந்தியில் நிலா நடித்த சின்ன பட்ஜெட் படம் ஒன்று ஹிட் அடித்ததால் தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் வருகின்றனவாம்!

தமிழில் பிஸியாகிவிட்ட அவரது முதல் ஹீரோ கம் டைரக்டர் எஸ்ஜே சூர்யாவிடமும் சொல்லி வைத்திருக்கிறாராம், புதிய வாய்ப்புகளுக்காக!


Click it and Unblock the Notifications











