twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிலாவுடன் சமரசம் நடிகை நிலாவுடன், ஜாம்பவான் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஆகியோர் வேறுவழியில்லாமல் சமரசம் செய்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நின்று போனபடம் மீண்டும் வளரவுள்ளது.பிரஷாந்த், நிலா, மேக்னா நாயுடு ஆகியோர் நடிப்பில் நந்தகுமார் இயக்கத்தில், ராஜா,சத்தியநாராயணன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜாம்பவான். இப்படத்தின் ஷூட்டிங்குற்றாலத்தில் சமீபத்தில் நடந்தது.அப்போது தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் திடீர் என மல்லுகட்டினார் நிலா.குளிக்கும் காட்சிக்காக ஒரு தொட்டி நிறைய மினரல் வாட்டரை கேட்டார் நிலா என்றதுதயாரிப்புத் தரப்பு.அந்தச் சண்டையை பெரிதாக்கிவிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போய்விட்ட நிலாவைசமாதானப்படுத்த தயாரிப்பாளரும் இயக்குனரும் போக அங்கேயும் சண்டைதொடர்ந்தது.இதையடுத்து என்னை கற்பழிக்க முயன்றீர்கள் என்று புகார் தருவேன் என்றுஅவர்களை மிரட்டிவிட்டு திடீரென காணாமல் போனார் நிலா.போனவர் அப்படியே ஒரு தெலுங்கு சூட்டிங்கில் செட்டில் ஆகிவிட்டார்.அங்கு டிவிக்கு அளித்த பேட்டியில், தன்னை தயாரிப்பாளர் கையைப் பிடித்து முறுக்கிதாக்கியதாகவும், தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கொலை மிரட்டல் விட்டதாகவும்கூறியிருந்தார் நிலா.தெலுங்குப் படத்தில் தமிழை விட இரண்டு மடங்கு காசு கிடைப்பதால், ஜாம்பவானைஅப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு தெலுங்கில் நடித்து வருகிறார் நிலா.இதனால் நொந்து போன ஜாம்வனான் தயாரிப்புத் தரப்பு தயாரிப்பாளர்கள் கவுன்சிலைஅணுகினர். இதையடுத்து ஜாம்பான் படத்தில் நடிக்க வேண்டும் நிலாவுக்கு கவுன்சில்உத்தரவிட்டது.ஆனால், அதை நிலா கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் நிலாசம்பந்தப்படாத காட்சிகளை மட்டும் இதுவரை சுட்டு வந்தது யூனிட்.அதே நேரத்தில் நிலா தொடர்பான பல காட்சிகளை எடுத்து முடித்து விட்டதால், அவர்இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனரும், ஹீரோ பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனிடம் போய் நின்றுள்ளனர். நீங்கள்தான் ஏதாவது வழி செய்ய வேண்டும்என்று அவர்கள் புலம்பவே, சரி வாங்க டெல்லிக்குப் போய் (நிலாவின் சொந்த ஊர்)நிலாவிடம் நேரடியாகப் பேசிப் பார்ப்போம் என்று தியாகராஜனும் மற்றவர்களும்டெல்லிக்குப் போயினர்.அங்கு நிலாவையும், அவரது பெற்றோரையும் சந்தித்து சமரசம் பேசினர். இதையடுத்துமீண்டும் நடிக்க வருகிறேன். ஆனால் நான் மினரல் வாட்டர் கேட்டதாக பொய்யானசெய்தியை பரப்பினீர்கள், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அப்போதுதான் நான் நடிக்க வருவேன் என்று நிபந்தனை போட்டார்.இதையடுத்து தயாரிப்பாளர் ராஜா ஒரு அறிக்கை மூலம் நிலாவிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அந்த வருத்த அறிக்கை விவரம்:குற்றாலத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள், அசம்பாவிதங்களுக்காகவருந்துகிறோம். முதல் படம் என்பதால் அறியாமல் சில தவறுகள் நடந்து விட்டன.நீங்கள் மினரல் வாட்டர் கேட்டதாக வந்த செய்திகள் உண்மைக்குப்புறம்பானவைதான். அது வந்ததுக்காக வருந்துகிறோம். உங்களைப் போன்ற இளம்நடிகைகளுக்கு இதுபோன்ற வேதனை நிகழ்ந்திருக்கக் கூடாது.குற்றாலம் காட்டுப் பகுதியில் நீங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே இரண்டுஆட்களை நிறுத்தி வைத்ததும் (இது வேறயா?, இவுங்களும் ஏதேதோபண்ணியிருப்பாங்க போல இருக்கே) தவறானதுதான்.தயவு செய்து பழைய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், படப்பிடிப்பில்கலந்து கொள்ளுங்கள். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று உறுதிஅளிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜா.இந்த சமரசத்தால் திருப்தி அடைந்துள்ள நிலா மீண்டும் நடிக்க வருவதாகஉறுதியளித்துள்ளாராம். இதனால் ஜாம்பவான் மீண்டும் வளரப் போகிறான்.

    By Staff
    |

    நடிகை நிலாவுடன், ஜாம்பவான் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஆகியோர் வேறுவழியில்லாமல் சமரசம் செய்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நின்று போனபடம் மீண்டும் வளரவுள்ளது.


    பிரஷாந்த், நிலா, மேக்னா நாயுடு ஆகியோர் நடிப்பில் நந்தகுமார் இயக்கத்தில், ராஜா,சத்தியநாராயணன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜாம்பவான். இப்படத்தின் ஷூட்டிங்குற்றாலத்தில் சமீபத்தில் நடந்தது.

    அப்போது தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் திடீர் என மல்லுகட்டினார் நிலா.குளிக்கும் காட்சிக்காக ஒரு தொட்டி நிறைய மினரல் வாட்டரை கேட்டார் நிலா என்றதுதயாரிப்புத் தரப்பு.

    அந்தச் சண்டையை பெரிதாக்கிவிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போய்விட்ட நிலாவைசமாதானப்படுத்த தயாரிப்பாளரும் இயக்குனரும் போக அங்கேயும் சண்டைதொடர்ந்தது.

    இதையடுத்து என்னை கற்பழிக்க முயன்றீர்கள் என்று புகார் தருவேன் என்றுஅவர்களை மிரட்டிவிட்டு திடீரென காணாமல் போனார் நிலா.

    போனவர் அப்படியே ஒரு தெலுங்கு சூட்டிங்கில் செட்டில் ஆகிவிட்டார்.


    அங்கு டிவிக்கு அளித்த பேட்டியில், தன்னை தயாரிப்பாளர் கையைப் பிடித்து முறுக்கிதாக்கியதாகவும், தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கொலை மிரட்டல் விட்டதாகவும்கூறியிருந்தார் நிலா.

    தெலுங்குப் படத்தில் தமிழை விட இரண்டு மடங்கு காசு கிடைப்பதால், ஜாம்பவானைஅப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு தெலுங்கில் நடித்து வருகிறார் நிலா.

    இதனால் நொந்து போன ஜாம்வனான் தயாரிப்புத் தரப்பு தயாரிப்பாளர்கள் கவுன்சிலைஅணுகினர். இதையடுத்து ஜாம்பான் படத்தில் நடிக்க வேண்டும் நிலாவுக்கு கவுன்சில்உத்தரவிட்டது.

    ஆனால், அதை நிலா கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் நிலாசம்பந்தப்படாத காட்சிகளை மட்டும் இதுவரை சுட்டு வந்தது யூனிட்.

    அதே நேரத்தில் நிலா தொடர்பான பல காட்சிகளை எடுத்து முடித்து விட்டதால், அவர்இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனரும், ஹீரோ பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனிடம் போய் நின்றுள்ளனர். நீங்கள்தான் ஏதாவது வழி செய்ய வேண்டும்என்று அவர்கள் புலம்பவே, சரி வாங்க டெல்லிக்குப் போய் (நிலாவின் சொந்த ஊர்)நிலாவிடம் நேரடியாகப் பேசிப் பார்ப்போம் என்று தியாகராஜனும் மற்றவர்களும்டெல்லிக்குப் போயினர்.

    அங்கு நிலாவையும், அவரது பெற்றோரையும் சந்தித்து சமரசம் பேசினர். இதையடுத்துமீண்டும் நடிக்க வருகிறேன். ஆனால் நான் மினரல் வாட்டர் கேட்டதாக பொய்யானசெய்தியை பரப்பினீர்கள், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அப்போதுதான் நான் நடிக்க வருவேன் என்று நிபந்தனை போட்டார்.


    இதையடுத்து தயாரிப்பாளர் ராஜா ஒரு அறிக்கை மூலம் நிலாவிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அந்த வருத்த அறிக்கை விவரம்:

    குற்றாலத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள், அசம்பாவிதங்களுக்காகவருந்துகிறோம். முதல் படம் என்பதால் அறியாமல் சில தவறுகள் நடந்து விட்டன.

    நீங்கள் மினரல் வாட்டர் கேட்டதாக வந்த செய்திகள் உண்மைக்குப்புறம்பானவைதான். அது வந்ததுக்காக வருந்துகிறோம். உங்களைப் போன்ற இளம்நடிகைகளுக்கு இதுபோன்ற வேதனை நிகழ்ந்திருக்கக் கூடாது.

    குற்றாலம் காட்டுப் பகுதியில் நீங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே இரண்டுஆட்களை நிறுத்தி வைத்ததும் (இது வேறயா?, இவுங்களும் ஏதேதோபண்ணியிருப்பாங்க போல இருக்கே) தவறானதுதான்.

    தயவு செய்து பழைய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், படப்பிடிப்பில்கலந்து கொள்ளுங்கள். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று உறுதிஅளிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜா.

    இந்த சமரசத்தால் திருப்தி அடைந்துள்ள நிலா மீண்டும் நடிக்க வருவதாகஉறுதியளித்துள்ளாராம். இதனால் ஜாம்பவான் மீண்டும் வளரப் போகிறான்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X