விஜய்யுடன் ஜோடி போடும் நிலா எஸ்.ஜே. சூர்யாவின் மனம் கவர்ந்த நாயகி நிலா, இளைய தளபதி விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளார். படத்தை இயக்கப் போவது சாட்சாத்எஸ்.ஜே.சூர்யாவே தான். படத்தின் பெயர் புலி.அப்படியே சிம்ரன் போலவே இருக்கிறாப்ல என்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலா, தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிககண்மணிகளுக்குள் புகுந்துவிட்டார்.கிளாமர் உடலும், அதில் அவர் காட்டும் கச்சிதமான கவர்ச்சிப் பாங்கும், தனது சொப்பு வாயால் அவர் பேசிய வசனங்களும் நிலாவுக்கெனஒரு கூட்டத்தை ரெடி செய்து விட்டது.முதல் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, இயக்குனர் தரணி தனது தெலுங்குப் படத்தில் நடிக்க நிலாவைக் கூப்பிட்டுப் போனார்.பங்காரம் என்ற அந்தப் படத்தில் நடிக்கப் போகும் நிலாவுக்கு ரூ. 20 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறார்களாம். ஹீரோவாக நடிப்பதுசிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண்.இப்படி முதல் படத்திலேயே ஸ்டார் நிலைக்கு உயர்ந்துள்ள நிலாவை தனக்கு ஜோடியாகப் போட சொல்லிவிட்டாாரம் விஜய்.இதுக்குத் தானே காத்திருந்தேன் என்பது போல உடனே நிலாவைக் கூப்பிட்டு தனது இயக்கத்தில் விஜய்யுடன் நடிக்கச் சொல்லிவிட்டார்சூர்யா. சூர்யா சொன்னால் வேறு என்ன வேண்டும் நிலாவுக்கு. உடனே ஓ.கே. சொல்லிவிட்டார்.தனக்கு மிக வேண்டிய சூர்யாவின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது ஒரு பக்க மகிழ்ச்சி என்றாலும், தமிழின் உச்ச ஹீரோவான விஜய்யுடன்நடிப்பதில் மாபெரும் சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார் நிலா.உண்மையிஸ், தனது முதல் படம் சரியாகப் போகாவிட்டால் அப்படியே திரும்பவும் டெல்லிக்கே போய் விடலாம் என்றுதான்நினைத்திருந்தாராம் நிலா. ஆனால் தனக்குக் கிடைத்துள்ள பெரும் வரவேற்பால் பிரகாசமாகிவிட்ட நிலா, இனி கோலிவுட்டை விட்டுப்போகும் மூடில் இல்லையாம்.புலி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் விஜய். விஜய் போலீஸ் வேஷம் போடுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது. அவரது காதலியாக நிலா வருகிறார். இந்தப் படத்தில் நிலாவுக்கு சம்பளம் ரூ. 15 லட்சம் என்கிறார்கள்.அவரைத் தேடிப் போன சில தயாரிப்பாளர்களிடம் ரூ. 20 லட்சம் வரை கேட்டு பயமுறுத்தி வரும் நிலா, சூர்யாவுக்காக புலி படத்தில் ரூ. 5லட்சத்தைக் குறைத்து வாங்கிக் கொண்டாராம்.இதற்கிடையே சூர்யா- நிலா இடையே காதல் என்றும் கோலிவுட்டில் ஒரு சூடான கிசுகிசு உலா வருகிறது. சூர்யா என்றாலே சூடுதா()னா?
எஸ்.ஜே. சூர்யாவின் மனம் கவர்ந்த நாயகி நிலா, இளைய தளபதி விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளார். படத்தை இயக்கப் போவது சாட்சாத்எஸ்.ஜே.சூர்யாவே தான். படத்தின் பெயர் புலி.
அப்படியே சிம்ரன் போலவே இருக்கிறாப்ல என்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலா, தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிககண்மணிகளுக்குள் புகுந்துவிட்டார்.
கிளாமர் உடலும், அதில் அவர் காட்டும் கச்சிதமான கவர்ச்சிப் பாங்கும், தனது சொப்பு வாயால் அவர் பேசிய வசனங்களும் நிலாவுக்கெனஒரு கூட்டத்தை ரெடி செய்து விட்டது.
முதல் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, இயக்குனர் தரணி தனது தெலுங்குப் படத்தில் நடிக்க நிலாவைக் கூப்பிட்டுப் போனார்.பங்காரம் என்ற அந்தப் படத்தில் நடிக்கப் போகும் நிலாவுக்கு ரூ. 20 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறார்களாம். ஹீரோவாக நடிப்பதுசிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண்.
இப்படி முதல் படத்திலேயே ஸ்டார் நிலைக்கு உயர்ந்துள்ள நிலாவை தனக்கு ஜோடியாகப் போட சொல்லிவிட்டாாரம் விஜய்.
இதுக்குத் தானே காத்திருந்தேன் என்பது போல உடனே நிலாவைக் கூப்பிட்டு தனது இயக்கத்தில் விஜய்யுடன் நடிக்கச் சொல்லிவிட்டார்சூர்யா. சூர்யா சொன்னால் வேறு என்ன வேண்டும் நிலாவுக்கு. உடனே ஓ.கே. சொல்லிவிட்டார்.
தனக்கு மிக வேண்டிய சூர்யாவின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது ஒரு பக்க மகிழ்ச்சி என்றாலும், தமிழின் உச்ச ஹீரோவான விஜய்யுடன்நடிப்பதில் மாபெரும் சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார் நிலா.
உண்மையிஸ், தனது முதல் படம் சரியாகப் போகாவிட்டால் அப்படியே திரும்பவும் டெல்லிக்கே போய் விடலாம் என்றுதான்நினைத்திருந்தாராம் நிலா. ஆனால் தனக்குக் கிடைத்துள்ள பெரும் வரவேற்பால் பிரகாசமாகிவிட்ட நிலா, இனி கோலிவுட்டை விட்டுப்போகும் மூடில் இல்லையாம்.
புலி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் விஜய். விஜய் போலீஸ் வேஷம் போடுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது. அவரது காதலியாக நிலா வருகிறார். இந்தப் படத்தில் நிலாவுக்கு சம்பளம் ரூ. 15 லட்சம் என்கிறார்கள்.
அவரைத் தேடிப் போன சில தயாரிப்பாளர்களிடம் ரூ. 20 லட்சம் வரை கேட்டு பயமுறுத்தி வரும் நிலா, சூர்யாவுக்காக புலி படத்தில் ரூ. 5லட்சத்தைக் குறைத்து வாங்கிக் கொண்டாராம்.
இதற்கிடையே சூர்யா- நிலா இடையே காதல் என்றும் கோலிவுட்டில் ஒரு சூடான கிசுகிசு உலா வருகிறது. சூர்யா என்றாலே சூடுதா()னா?


Click it and Unblock the Notifications