பணத்துக்காக ஓட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல!- நித்யா மேனன்
சென்னை: பணத்துக்காக ஓட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல என்று காரசாரமாகக் கூறியுள்ளார் நடிகை நித்யாமேனன்.
புத்தாண்டு என்றாலே, முந்தைய நாள் இரவும், அடுத்த நாள் இரவும் பிரபல ஓட்டல்கள், க்ளப்களில் நடிகைகள் நடனமாடுவது தொடர்கிறது.

இந்தப் புத்தாண்டிலும் சென்னையில் ஏராளமான ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று விடிய விடிய நடனம் ஆடினர் ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள். மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களின் நட்சத்திர ஓட்டல்களிலும் இந்த நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
நடிகை சார்மி ஹைதராபாத்தில் ஆட பெரும் தொகை சம்பளமாக பெற்றார். இன்று இரவும் சில ஓட்டல்களில் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.
தமிழ், தெலுங்கில் இப்போது முன்னணியில் உள்ள நடிகைகளுள் ஒருவரான இவரை சில ஹோட்டல்கள் அணுகி, பெரும் தொகைக்கு ஆடக் கூப்பிட்டார்களாம். ஆனால் எவ்வளவு கொடுத்தாலும் ஆட மாட்டேன் என மறுத்துவிட்டாராம் நித்யா மேனன்.
பணத்துக்காக நடனம் ஆடுவது ஒரு பிழைப்பா? நடிப்பது வேறு, இப்படி பணத்துக்காக ஹோட்டல்களில் ஆடுவது வேறு. நான் அத்தகைய கேவலமான நடிகை அல்ல, என்று ஆவேசமாக கூறிவிட்டாராம் நித்யா மேனன்.


Click it and Unblock the Notifications











