Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
“இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்..” கோவா பட விழாவில் ஷாக் தந்த நித்யாமேனன்!
சினிமா தனக்கு ஒத்துவராது என்பதால் ஒதுங்கி இருந்ததாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பனாஜி: சினிமா மீதான தனது காதல் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் போன்றது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரைப்பட வல்லுனர், நடிகர், நடிகையர், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் தினமும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். நேற்றைய கலந்துரையாடலில் நடிகை நித்யா மேனன் கலந்துகொண்டார்.
கருப்பு ஜட்டி கண்ணுக்குத் தெரியுதா.. நெட்டிசன்களிடம் சிக்கித் தவிக்கும் யாஷிகா ஆனந்த்!
சினிமா செட்டாகாது
அப்போது பேசிய அவர், " என்னுடைய கேரக்டர் சினிமாவுக்கு சுத்தமாக செட்டாகாது. காடுகளில் அலைந்து திரிந்து, மிருகங்களை பற்றி படமெடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழலால் நடிகையாகிவிட்டேன்.
சினிமா காதல்
ஆனால் சமீபகாலமாக நான் சினிமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். இது ஒரு அழகான துறை. இதன் மூலம் மக்களின் மனநிலையை என்னால் மாற்ற முடிகிறது.
அரேஞ்சுடு மேரேஜ்
எனது சினிமா வாழ்க்கை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. காதல் திருமணம் போன்று, எடுத்த உடனே கணவன் - மனைவிக்குள் அந்நோன்யம் பிறந்துவிடாது. அரேஞ்சுடு மேரேஜில் நாளாக ஆக தான் ஆழமான காதல் உருவாகும். அதுபோல் தான் எனக்கு சினிமா மீது இப்போது காதல் வந்துள்ளது.
வேலை வாங்க முடியாது
எனக்கு மெத்தட் ஆக்டிங் எல்லாம் தெரியாது. என்னை யாராலும் அதிகமாக வேலை வாங்க முடியாது. சீன்களை படித்து, புரிந்துகொண்டு நானாகவே நடித்துவிடுவேன். அது தானாகவே வந்துவிடும்", என நித்யா மேனன் கூறினார்.