Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
“இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்..” கோவா பட விழாவில் ஷாக் தந்த நித்யாமேனன்!
சினிமா தனக்கு ஒத்துவராது என்பதால் ஒதுங்கி இருந்ததாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பனாஜி: சினிமா மீதான தனது காதல் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் போன்றது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரைப்பட வல்லுனர், நடிகர், நடிகையர், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் தினமும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். நேற்றைய கலந்துரையாடலில் நடிகை நித்யா மேனன் கலந்துகொண்டார்.
கருப்பு ஜட்டி கண்ணுக்குத் தெரியுதா.. நெட்டிசன்களிடம் சிக்கித் தவிக்கும் யாஷிகா ஆனந்த்!
சினிமா செட்டாகாது
அப்போது பேசிய அவர், " என்னுடைய கேரக்டர் சினிமாவுக்கு சுத்தமாக செட்டாகாது. காடுகளில் அலைந்து திரிந்து, மிருகங்களை பற்றி படமெடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழலால் நடிகையாகிவிட்டேன்.
சினிமா காதல்
ஆனால் சமீபகாலமாக நான் சினிமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். இது ஒரு அழகான துறை. இதன் மூலம் மக்களின் மனநிலையை என்னால் மாற்ற முடிகிறது.
அரேஞ்சுடு மேரேஜ்
எனது சினிமா வாழ்க்கை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. காதல் திருமணம் போன்று, எடுத்த உடனே கணவன் - மனைவிக்குள் அந்நோன்யம் பிறந்துவிடாது. அரேஞ்சுடு மேரேஜில் நாளாக ஆக தான் ஆழமான காதல் உருவாகும். அதுபோல் தான் எனக்கு சினிமா மீது இப்போது காதல் வந்துள்ளது.
வேலை வாங்க முடியாது
எனக்கு மெத்தட் ஆக்டிங் எல்லாம் தெரியாது. என்னை யாராலும் அதிகமாக வேலை வாங்க முடியாது. சீன்களை படித்து, புரிந்துகொண்டு நானாகவே நடித்துவிடுவேன். அது தானாகவே வந்துவிடும்", என நித்யா மேனன் கூறினார்.