Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வேற வழியே இல்லை... இனிமே கவர்ச்சிதான்.... நிவேதா பெத்துராஜின் பளிச் பதில்!
சென்னை : நடிகை நிவேதா பெத்துராஜ் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சீரியசான கதாபாத்திரங்களில் நடித்து நடித்து சோர்வடைந்து விட்டேன்.
நேரடியாக விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷின்
எனக்கு தகுந்தபடி குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
நிவேதா பெத்துராஜ்
ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
முன்னணி நடிகர்களுடன்
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவேன், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் திரைப்படத்தில் நடித்து நல்ல பெயர் எடுத்தார்.
அலா வைகுண்டபுரம்லோ
தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்த நிவேதாவிற்கு, தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது இவர், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டையை கிளப்பி நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.
பொன்மாணிக்கவேல்
பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு இந்தப் படத்தின் மீதிருக்கும் பைனான்ஸ் சிக்கல்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நக்சலைட்டாக
சாய் பல்லவி மற்றும் ராணா, நந்திதா தாஸ் நடித்துள்ள விரட்ட பர்வம் படத்தில் நிவேதா பெத்துராஜ் நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளளனர். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
கவர்ச்சி ஆட்டம்
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்.
தாராளமா கவர்ச்சி காட்டுவேன்
நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடித்து நடித்து சோர்வடைந்து விட்டதாக கூறியுள்ளார். எனக்கு எப்பவும் சீரியசான கதாபாத்திரங்கள் வருகின்றன. கதாபாத்திரங்களைத் தவிர தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தையும் காண்பிக்குமாறு உள்ள கதாபாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். ஏதாவது சில இயக்குனர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்துடன் வருவார் என்று நம்புகிறேன். அப்படி கவர்ச்சி காட்டும் எந்த இயக்குனராவது கேட்டால் நிச்சயம் நான் ஏற்றுநடிப்பேன் என்று கூறியுள்ளார்.